Skip to main content

கேரளாவில் தவித்த தொழிலாளர்கள் மீட்பு... சொந்த ஊருக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி... நக்கீரன் ஆக்சன் ரிப்போர்ட் எதிரொலி

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
nagapattinam



நாகை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செங்கல் அறுக்க சென்று கரோனாவால் வேலையில்லாமல் உணவுக்கு வழியின்றி சிக்கித்தவித்த தொழிலாளர்களை தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வந்திருப்பது மனநிறைவை தந்துள்ளது. மீட்புபணியில் நக்கீரனின் பங்கு முக்கியத்துவம் கொண்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், மக்கள் பிரதிநிதிகளும்.


 

 

nagapattinam



நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் இருந்து, கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் கூலி வேலைக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கேரள மாநிலம் ஆலப்புழா, கிழக்காஞ்சேரி பகுதிக்கு சீர்காழி அருகே உள்ள எடமணல், வருஷபத்து திருவெண்காடு, மங்கைமடம், திருநகரி  உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வேலைக்கு சென்று கரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக வேலையை இழந்து தவித்தனர். அன்றாட உணவு தேவைக்கே வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் கண்ணீரோடு தங்களின் நிலைமையை விளக்கி வீடியோவாக எடுத்து நமக்கு அனுப்பினர். அதை அடுத்த நிமிடமே சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி, மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அதை அனுப்பி மீட்க கோரினோம். அதோடு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பதிவிறக்கம் செய்து உதவிட கேட்டுக்கொண்டோம்.


அவர்களின் கண்ணீர் வீடியோவை பார்த்து முதலில் ஆர்வத்தோடு களப் பணியில் இறங்கினார்கள் சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாரதியும், நாகை ஆட்சியரும். நாகை ஆட்சியர் கேரளாவில் தவித்துவரும் தொழிலாளர்களின் தொடர்பு எண் கிடைத்தால் சுலபமாக மீட்டுக்கொண்டுவந்துவிடலாம் என்றார், உடனே நாம் பல இடங்களில் தொடர்பு கொண்டு அங்குள்ள எழிலரசி, மற்றும் குமார் என்பவர்களின் செல்போன் நம்பரை வாங்கி கொடுத்தோம் அதன்பிறகு மீட்கும் வேலையில் அரசு விதிப்படி நடைமுறைகள் முடிந்து 8 ம் தேதி இரவு சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 


கேரளாவில் இருந்து மீண்டுவந்துள்ள பொதுமக்கள் கூறுகையில், "எங்களது கண்ணீரை துடைத்த அனைவருக்கும் நன்றி. ஆட்சியருக்கும், எம்.எல்.ஏ பாரதிக்கும். தகவலை சரியான இடங்களுக்கு கொண்டு சேர்த்த நக்கீரனுக்கும் மிக்க நன்றி. இனி அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும், உறவுகளோடும் பெற்ற பிள்ளைகளோடு குடிப்போம். அதற்கு வழி செய்த அரசுக்கும் நன்றி," என நெஞ்சார மகிழ்ந்து கூறினார்கள்.
 

 

 

nagapattinam



நமது கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடமே தொழிலாளர்களை மீட்க ஏற்பாடு செய்து மீட்டுக்கொண்டுவந்த சீர்காழி எம்.எல்.ஏ.வையும், ஆட்சியரையும் நக்கீரன் மகிழ்வோடு வாழ்த்துகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.