Skip to main content

கடத்தவில்லை... மிரட்டல் விடுக்கவில்லை... காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம்..! அதிமுக எம்.எல்.ஏ விளக்கம்..!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

kallakurichi admk mla prabhu

 

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம். இவரது தந்தை ஐயப்பா, தாய் தைலம்மை. ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக சுமார் பத்தாண்டுகளாக பதவியில் உள்ளார்.

 

இந்தநிலையில், தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயில் அர்ச்சகராக உள்ள சாமிநாதனின் மகள் கல்லூரி மாணவியான சௌந்தர்யாவுக்கும் பிரபுவுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட காதலை சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் தந்தை இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் சௌந்தர்யாவின் முழு சம்மதத்துடன் சௌந்தர்யாவின் உறவினர்கள் மற்றும் எம்.எல்.ஏ பிரபுவின் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள, எளிமையான முறையில் பிரபு - சௌந்தர்யா திருமணம் பிரபுவின் வீட்டில் இன்று அதிகாலை நடைபெற்றது. 

 

திருமணத்திற்கு பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபு. அந்த வீடியோவில், நாங்கள் இருவரும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.

 

வீடியோவில் அவர், வணக்கம். நான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு. எனக்கும் சௌந்தர்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சில வதந்திகள் வந்துகொண்டிருக்கிறது. நான் சௌந்தர்யாவைக் கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வற்புறுத்தி திருமணம் செய்ததாகவும் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம் ஒரு சம்பவமும் நடக்கவில்லை.

 

Ad

 

நாங்கள் இருவரும் காதலித்தோம். சௌந்தர்யா காதலித்ததால் அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டோம். அவர்கள் தர மறுத்தார்கள். பின்னர் நாங்கள் இருவரும் எங்கள் அப்பா, அம்மா சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டோம். சௌந்தர்யாவுக்கோ, இவர்கள் குடும்பத்திற்கோ கொலை மிரட்டலோ, சௌந்தர்யாவுக்கு ஆசாபாசங்கள் பேசியோ திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.