Skip to main content

உரசலில் இந்திய - அரபு நட்பு! உலைவைத்த பழைய ட்வீட்!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


ஒரு ட்வீட் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தலைவலியைக் கொண்டுவந்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரச்சனைக்குக் காரணமான ட்வீட்டுக்குச் சொந்தக்காரர் கர்நாடகாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. அடிப்படையில் வழக்கறிகஞரான தேஜஸ்வி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். ஆனால் இப்போது பிரச்சினைக்குக் காரணமாகியிருக்கும் ட்வீட், முன்பே அதாவது 2015-ல் ட்வீட் செய்தது.
 

 

 

 

அப்படி ட்வீட்டில் என்ன சொல்லியிருக்கிறார்…

 

95 சதவிகித அரபுப் பெண்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக ஆர்கசமே அடைந்ததில்லை. ஒவ்வொரு அரபுத் தாயும் அன்பின் அடையாளமாக இல்லாமல் செக்ஸ் செயல்பாட்டின் விளைவாக குழந்தைகளை ஈன்றிருக்கிறார்கள் என தாரேக் பத்தா என்ற கனடிய- பாகிஸ்தானிய எழுத்தாளரின் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். கூடவே அவரது கருத்தில் தனக்கு முழு உடன்பாடு எனத் தனி ட்வீட்டும் செய்திருக்கிறார்.

 

Tejasvi Surya

 

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பார்களே அப்படித்தான்… ஒரிஜினலாக அந்த ட்வீட்டை வெளியிட்ட நேரத்தில் எதுவும் நடக்கவில்லை. கடந்த வருடம் தேர்தலில் நின்றபோது, எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிரான தேஜஸ்வியின் ட்வீட்டுகளைத் தோண்டி வெளியிட்டதில் இந்த ட்வீட்டும் அடக்கம். அப்போதும் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஏப்ரல்-19 ஆம் தேதி சமூக ஊடகத்தில் தேஜஸ்வியின் இதே ட்வீட் எடுத்தாளப்பட்டு, விமர்சனங்கள் எழுந்தன.
 

yy

 

http://onelink.to/nknapp


ஏற்கெனவே உலகமே ஊரடங்கில் இருக்கும் நிலையில், அரேபியாவின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவரான நூரா என்பவர் பார்வையில் பட்டிருக்கிறது இந்த ட்வீட். அவர் ட்விட்டரில் தேஜஸ்வியின் ட்வீட்டைக் குறித்து, இந்தியாவைச் சில தலைசிறந்த பெண் அரசியல் தலைவர்கள் ஆட்சி செய்திருந்தபோதும் பெண்களின் மீதான மரியாதை உங்களிடம் இல்லை. உங்கள் வளர்ப்பு குறித்து வருந்துகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் உங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அரபு நாட்டுக்குப் பயணம் வந்துவிடாதீர்கள். நீங்கள் இங்கு வரவேற்கப்படமாட்டீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எனப் பதிலடி தந்திருக்கிறார்.

 

tttt

 

அரபு அரச குடும்பம் வரை இந்த விவகாரம் சென்று சேர்ந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர், 
 

மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்தியா- அரபு அமீரகத்திற்கு இடையான உறவு பரஸ்பரம் மரியாதையுடன் திகழ்ந்துவந்திருக்கிறது. உங்களது பாராளுமன்ற உறுப்பினர் இப்படிப் பொதுவெளியில் எம் தேசப் பெண்களை அவமதிப்பதை அனுமதிக்கிறீர்களா… எனச் சூடாகக் கேள்வியெழுப்பினார்.

555

இதையடுத்து, தேஜஸ்வி தனது ட்வீட்டர் பக்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார். அவரது ஆதரவாளர்கள் அது பழைய ட்வீட், தவிரவும் தேஜஸ்வியின் சொந்தக் கருத்தல்ல. வேண்டுமென்றேதான் இந்த ட்வீட் தற்சமயம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
 

மாறாக, அவருக்கு எதிரானவர்கள் தேஜஸ்வியின் பழைய ட்வீட்டுகளைப் புரட்டினால் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது மனோபாவம் வெளிப்படும். ஒரு விஷயத்துடன் உடன்பாடு இருப்பதனால்தானே அதை ட்வீட் செய்கிறார். முன்னால் பதிவிட்டது என நழுவிக்கொள்ள முடியாது என்கிறார்கள்.
 

விஷயம் வெகுசூடாக மாறுவதையடுத்து ஏப்ரல் 20-ஆம் தேதி பிரதமரின் ட்விட்டர் கணக்கிலிருந்து, “கோவிட்-19 வைரஸ் ஒருவரைத் தாக்குவதற்கு முன் இனம், மதம், நிறம், ஜாதி, மொழி, எல்லை எதையும் பார்ப்பதில்லை. எனவே ஒற்றுமையையும் சகோதரத்துவத்துவத்தையும் நோக்கியதாக நமது செயல்பாடு அமையவேண்டும்.” என ட்வீட் செய்தார். ஆனால் பிரதமரின் பதில் போதுமானதல்ல என்ற முணுமுணுப்புக் கிளம்பியிருக்கிறது.
 

இது ஒருபுறமென்றால், இந்தியாவிலிருந்து அரபு நாடுகளில் வேலைபார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். இவர்கள் எத்தனையோ துயர்களை அனுபவித்து சம்பாதித்து தன் குடும்பத்துக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் பங்களித்து வருகிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டே சில விஷமிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகள் வெளியிடுவதை அரபு நாடு சமீபமாகக் கவனித்துக் கொண்டுதான் வந்தது.

 

அவை எல்லைமீறிப் போனதையடுத்து இத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தும், இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பியும் பதில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் தம் நாட்டில் இருந்துகொண்டே இத்தகைய விஷமப் பதிவுகளை வெளியிடுபவர்களைக் உற்றுக்கவனிக்கத் தொடங்கியுள்ளது.
 

அரபு தேசம் பொதுவாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. குஜராத் கலவரத்தின்போதோ, சமீபத்திய தேசிய குடியுரிமை சட்டத்தின்போதோ இந்தியாவை விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ செய்யாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் சொந்த நாட்டு பெண்களையும், அவர்களது தேசத்தில் ராமர் கோவில் கட்டுவோம் போன்ற வீண்வம்பு பதிவுகளையும் அவர்கள் அங்கீகரிக்கத் தேவையில்லை.
 

http://onelink.to/nknapp

 

ஐக்கிய அரபு தேசம் தன் நாட்டுப் பணிகளுக்காக இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. ஒருசில விஷமிகளால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டால் அதில் இந்தியாவுக்குதான் அதிக நஷ்டம் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
 

 

 



 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.