Skip to main content

நான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன்!!! பொன்முடி கர்..புர்..! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020
ddd


கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் உதயசூரியனும் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றிய செயலாள ரான துரைராஜும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுடன் இணைந்து கட்சிக்கு துரோக மிழைப்பதாக மாவட்ட உடன் பிறப்புகள் சிலர், கடந்த மாதம் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது முழக்க மிட்டார்கள். இதனை அப்போதே நாம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், கட்சிப் பணியை சரிவர செய்யாததால் ஒன்றிய செயலாளர் பதவி யிலிருந்து துரைராஜ் நீக்கப்படுகிறார் என கடந்த 20-ந்தேதி கட்டம் கட்டியது திமுக தலை மை. துரைராஜுக்கு பதிலாக சந்திரசேகரனை நியமித்திருக் கிறார் மு.க.ஸ்டாலின்.

 

துரைராஜ், பொன்முடியின் சமூகத்தை சேர்ந்தவர். சந்திரசேகரன், வன்னியர் சமூகத்தவர். அதனால், பொன்முடி, மா.செ.உதயசூரியனை தொடர்புகொண்டு, ஒருமையில் மிரட்டியிருக்கிறார். தலைமையின் முடிவுதான் இது என்றிருக்கிறார் உதயசூரியன். உடனே, ஆர்.எஸ்.பாரதிக்கு ஃபோன் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பொன்முடி. அதற்கெல்லாம் அசராத ஆர்.எஸ்.பாரதியோ, ""எதுவாக இருந்தாலும் தலைவர்(ஸ்டாலின்)கிட்டே பேசுங்க'' என பதிலுக்கு கடுப்படித்திருக்கிறார்.

 

ஸ்டாலின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட பொன்முடி, ""எனது ஆதரவாளரை கட்டம் கட்டுவதற்கு முன் என்னிடம் கேட்க மாட்டீர்களா? அப்புறம் எதற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி? நான் ராஜினாமா செய்துட்டு போய்டுறேன்'' என்றிருக்கிறார். இது பொதுச்செயலாளர் துரைமுருகன் கவனத்திற்குப் போக, அவர் சொன்னபடி, கட்டம் கட்டப்பட்ட துரைராஜை அழைத்துக் கொண்டு அறிவாலயத்துக்கு 23-ந்தேதி போயிருக்கிறார் பொன்முடி.

 

அங்கே ஸ்டாலின், துரை முருகன், கே.என்.நேரு, ஆர்.எஸ் .பாரதி எல்லோரும் இருக்க, பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் பொன்முடி. தன்னுடைய முடிவுக்கு எதிராக பொன்முடி நடந்துகொள்வதை ரசிக்காத ஸ்டாலின், இத என்ன னுன்னு பேசி முடிவெடுங்க என கே.என். நேருவிடம் சொல்ல, பொன்முடியின் இயல்பு அறிந்த நேரு, நீங்களே பேசுங்க என ஜகா வாங்க, கடைசியில் ஸ்டாலினே விசாரித்திருக்கிறார். துரைராஜுக்கு பதிலா வேறு ஒருவரை நியமிச்சாச்சு. அத மாத்த முடியாது. துரைராஜுக்கு வேற ஒரு பொறுப்பு தர்றோம் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் ஸ்டாலின்.

 

இதனையடுத்து, கட்சி வளர்ச்சிக்காக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பதவியில் துரைராஜ் நியமிக்கப்படுவதாக அறிவாலயம் அறிவித்துள்ளது. கட்சி பணிகளை சரிவர செய்யாத காரணத்தால் நீக்கப்பட்ட ஒருவரை நான்கே நாளில் கட்சி வளர்ச்சிக்கான பணியில் நியமித்துவிட்டதில் பொன்முடிக்கு ஆறுதல்.

 


 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.