Skip to main content

“உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தோம்; அதன்பிறகு அன்றைய ஆளுநர் வெளியில் வரவில்லை..” - திமுக சிவ ஜெயராஜ்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about dravidian model and old age pension scheme  
சிவ ஜெயராஜ்

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக உதயநிதி பதவியேற்றதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி, பதில்கள் கீழே...

 

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் திமுக கருத்து தெரிவிக்கலாமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புகிறாரே?

தேர்தலில் நின்று ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்று நிரூபித்து கலைஞரின் மகனாக இருந்தாலும் ஸ்டாலின் முதலமைச்சராக 50 ஆண்டுக்காலம் ஆனது. ஆனால், பழனிசாமி யார் காலில் விழுந்தார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும். ஜெயலலிதா இருக்கும்போது எத்தனை தேர்தலில் பிரச்சாரம் பண்ணினார் எடப்பாடி.

 

திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறாரே...

90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். தமிழகத்தின் கடனை 6 லட்சம் கோடியாக அதிமுக விட்டுவிட்டுச் சென்றார்கள். அதற்கான நிதி ஆதாரத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கான உரிமைத்தொகை தொடர்பான கணக்கெடுப்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது. 2011 இல் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியின் பக்கம் எண் 122 இல் தந்த வாக்குறுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் என்று சொன்னீர்கள். 10 வருட ஆட்சியில் இருந்தபோது உங்களால் அதை நிறைவேற்ற முடிந்ததா?

 

24 நான்கு மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் செல்லக்கூடிய கொடநாடு எஸ்டேட்ல 27 கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த மூன்று பேர் இறந்து போனார்கள். கொள்ளையடித்த குற்றவாளிகளே இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று பேட்டிக் கொடுத்தார்கள். இதைத்தான் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். கொடநாட்டைக்கூட உங்களால் பாதுகாக்க முடியவில்லை. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்யவேண்டும். வேலுமணியை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யவேண்டும் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னோமே, அதையும் பழனிசாமி படித்துக்காட்ட வேண்டியதுதானே.

 

திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறாரே...

முதியோர் உதவித்தொகை என்ற ஒன்றை உருவாக்கியவர் கலைஞர்தான். எடப்பாடி பழனிசாமிக்கு இது தெரியாது. 300 ரூபாயில் இருந்து கலைஞர் திட்டத்தை உருவாக்கினார். திருமண உதவித்தொகையும் உருவாக்கியது; 10-வது வரைக்கும் படித்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய், 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் 25 ஆயிரம் ரூபாய் என அறிவித்தது எல்லாம் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான். இதுவெல்லாம் ‘உமன் எம்பவர்மெண்ட்’ என்பதற்கான அடிப்படைக் கொள்கைகள்தான். எடப்பாடி ஆட்சியில் 40 சதவீத பேருக்குத்தான் அவர்கள் கொடுத்தார்கள். தற்போது 65 சதவீத மக்களுக்கு உயர்த்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

dmk advocate siva jeyaraj talks about dravidian model and old age pension scheme  

 

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறாரே...

தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியைக் கொடுங்கள் என்று உண்மையான எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை வையுங்கள். அதிமுக ஆட்சியின் போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் நியமனங்களில் தலையிடுகிறார், சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசில் தலையிடுகிறார் என்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தோம். அதன்பிறகு அவர் வெளியில் வரவில்லை.

 

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவரது தலைமையில் திமுக பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அப்படி பிரதமரைப் பார்த்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியை வாங்கி வாருங்கள். தமிழகத்திற்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் இல்லாத குறைந்த தொகையை விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். மருத்துவத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கிறார்கள். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிலையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்ய பயோ-டெக்குக்கு அனுமதி கொடுங்கள் என்றோம். அவர்கள்  அனுமதி மறுக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம் தர மக்களாக வஞ்சிக்கிறது.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.