Skip to main content

பேராசிரியர்களைக் காப்பாற்ற காய் நகர்த்தும் ஐஐடி...  விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

"ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலைக் கொடூரம் நிகழ்ந்து 20 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட பாத்திமாவின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை செய்யும் காவல் துறையோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணையை தீவிரப் படுத்தவில்லை' என்ற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 

fathima



இந்நிலையில், 2019 நவம்பர் 27-ந் தேதி பாத்திமாவின் சகோதரி ஆயிஷா, தந்தை அப்துல் லத்தீப் உள்ளிட்ட உறவினர்கள் மீண்டும் சென்னை வந்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து, பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடம் நாம் கேட்டபோது,  எனது சகோதரியின் மரணத்துக்குக் காரணமான துணைப்பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் உள்ளிட்ட 3 பேர் பற்றி செல்போனில் டைப் செய்து வைத்திருந்த தகவல்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு தான் அவளது செல் போனில் புதிய பாஸ்வேர்டு போட்டு லாக் செய்து விட்டு கோட்டூர்புரம் போலீஸிடம் ஒப்படைத்து விட்டுப் போனேன். அந்த, செல்போன் சென்னை மயிலாப்பூரிலுள்ள தமிழக அரசின் தடயவியல் பரிசோதனைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதனாலதான், நேர்ல வந்து காவல்துறை முன்னிலையில அந்த பாஸ்வேர்டை நீக்கிக் கொடுத்தேன். பரிசோதனை முடிவை கோர்ட்டுக்கு அனுப்பிவிடுவோம்னு சொல்லிட்டாங்க.
 

fathima



பிறகு, அங்கிருந்து புறப்பட்டு சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி.) காவல்துறை கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சாரை சந்தித்தோம். கிட்டத்தட்ட மூணுமணி நேரம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டார்கள். ஆரம்பத்துல, சி.பி.ஐ. விசாரணை கோரலாம்ங்குற மைண்டுல தான் இருந்தோம். கேரள முதல்வர் மாண்புமிகு பினரயி விஜயன் அவர்கள் கூட ‘சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை பண்ணவா?'ன்னு கேட்டாரு. ஆனா, எங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி சார் மேல நம்பிக்கை இருக்கு. அதனால, சி.பி.ஐ. வேணாம்… சி.சி.பி.யே விசாரிக்கட்டும்ங்குற மனநிலைக்கு வந்துட்டோம்'' என்கிறார் ஆயிஷா.


ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், தோழிகள் என பலரிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட் டது ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சி.சி.பி. அதே நேரத்தில் ஐ.ஐ.டி. நிர்வாகமோ, விசாரணையில் உண்மை தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதால் பாத்திமாவுடன் மிகவும் நெருக்கமான தோழிகளிடம் விசாரணை செய்யப் படவில்லை. அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. பாத்திமாவின் லேப்டாப் மற்றும் டேப்ளட் ஆகியவற்றை ஆயிஷா சி.சி.பி.யிடம் ஒப்படைத்திருக்கிறார். இவை, நீதிமன்ற ஒப்புதலுடன் திறந்து ஆராய்ந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க இன்னும் 15 நாட்கள் ஆகலாம் என்று சொல்லியிருக்கிறது காவல்துறை. இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொல்லம் எம்.பி. பிரேமச்சந்திரன் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து நீதி கிடைக்க கோரிக்கை வைக்க இருக்கிறது மாணவி பாத்திமாவின் குடும்பம். தங்களது பேராசிரியர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது ஐ.ஐ.டி. நிர்வாகம். 

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.