Skip to main content

அண்ணாமலை யாத்திரையில் பணிப் பெண்கள்? - அம்பலப்படுத்தும் மூத்த நிர்வாகி

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

bjp annadurai interview about Annamalai Yatra

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை குறித்துப் பல்வேறு தகவல்களை பாஜக முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

“அண்ணாமலை கர்நாடகாவில் ஒரு போலீஸ் அதிகாரியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். பாஜக அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது. அரசியலில் ஜொலிப்பதற்கு அனுபவமும், மக்களை அரவணைத்துச் செல்லும் தன்மையும் மிக முக்கியம். அனைவரும் தலைவராகிவிட முடியாது. அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவராக அறிவித்ததை பாஜகவில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. குறுகிய காலத்தில் இவர் தலைவரானதை யாரும் விரும்பவில்லை.

 

பாஜகவை மறைமுகமாக வளர்த்து விடுவதே திமுக தான். இந்த பாதயாத்திரையில் இவரால் திமுக ஊழல் செய்துள்ளது என்று மட்டும் தான் பேச முடியும். மணிப்பூர் குறித்து இவரால் பேச முடியுமா? விலைவாசி உயர்வு குறித்து பேச முடியுமா? இவர்கள் செய்த எந்த நல்ல விஷயம் குறித்தும் இவர்களால் பேச முடியாது. அண்ணாமலையை சுற்றி ஒரு குரூப் இருக்கிறது. அவர்களைத் தாண்டி மற்ற தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாமலையை சந்திக்க முடியாது. இவர்களுக்கு ஓட்டலில் யாரும் ரூம் கொடுக்க மாட்டார்கள். அதனால் சொகுசு வேனில் ஊர்வலம் செல்கிறார்கள். இவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு பணிப் பெண்களும் இருக்கிறார்கள்.

 

மதுவை ஒழிக்கிறேன் என்று இங்கு பேசுகிறார்கள். ஆனால் பாண்டிச்சேரியில் பாஜக மது ஆலை வைத்திருக்கிறது. இவர்கள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் மது இருக்கிறது என்பது போல் இவர்கள் பேசுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் மதுவை ஒழித்து முன்மாதிரியாக பாஜக இருக்கலாமே? சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலிவரதன் என்பவர் கட்சியைச் சேர்ந்தவர்களிடமே அசிங்கமாகப் பேசினார். அவர் மேல் அண்ணாமலை ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? இதுபோல் கே.பி. ராமலிங்கம் என்பவரும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசினார். அவர் மீதும் நடவடிக்கை இல்லை.

 

பாஜகவில் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் இந்த நடைபயணம் தேவையற்றது என்று தான் நான் நினைக்கிறேன். இதனால் பாஜக வளராது. முதலில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். மணிப்பூரில் கலவரத்தை நடத்தியதே பாஜக தான். திமுகவை மிரட்டுவதற்காகத் தான் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு அமித்ஷாவை அழைத்து வந்தார்கள். பிரதமர் வர மறுத்துவிட்டார். இந்த யாத்திரையை வைத்து கணக்கு காட்டி மத்திய பாஜகவிடம் பணம் பெறுவதற்குத் தான் இது பயன்படும். இதனால் கட்சியை வளர்க்க முடியாது.

 

முதலில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர்ந்ததா என்பதை மக்களிடம் அண்ணாமலை கேட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறைந்துள்ளது. ஆனால் முன்பெல்லாம் மீனவர்களுக்கு படகாவது திரும்பக் கிடைத்தது. இப்போது படகையும் அவர்கள் திரும்பக் கொடுப்பதில்லை. இதற்கு இறப்பதே மேல் என்று அவர்கள் நினைக்கின்றனர். விவசாயிகளின் வயிற்றில் அடித்து என்எல்சி நிர்வாகம் என்ன சாதிக்கப் போகிறது? இது கண்டிக்கத்தக்கது. மிகப்பெரிய பாவம். மணிப்பூர் போல தவறுக்கும் காரணமாக இருந்துவிட்டு கண்டனமும் தெரிவிக்கும் வேலையைத் தான் இதிலும் பாஜக செய்கிறது. மக்களை இவர்கள் முட்டாளாக்க நினைக்கின்றனர்” என்றார். 

 

 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.