Skip to main content

தஞ்சை பெரிய கோயிலுக்கு சீமான் ஏன் வரக்கூடாது..? - அர்ஜூன் சம்பத் பதில்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020


சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
 

xf



நடிகர் விஜய் தொடர்பாக செய்திகள் சர்ச்சைகள் ஆகிவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பற்றியும் அவர் மதம் மாறினார் என்ற தொனியில் வெளியான செய்தியை குறிப்பிட்டு "போய் வேற வேலையை பாருங்கடா" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

அவருடைய கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தமிழகத்தில் திரைப்படத்துறையினர் மூலம் கிருஸ்துவத்தை பரப்ப ஒரு முயற்சி நடைபெற்று வருகின்றது. மோசடி மதமாற்றத்தை செய்ய தமிழகத் திரை துறையினருக்கு பணம் வருகின்றது. கிருஸ்துவ கல்லூரி வைத்திருப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக அவர் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இந்தமத முறைகளை அவமதிப்பதற்காக பல துறைகளில் இருப்பவர்கள் முயற்சி மேற்கொள்கிறார்கள். அதில் ஒரு கட்டமாகத்தான் சினிமா துறையில் இருப்பவர்கள் செய்கிறார்கள். பிகில் படத்துக்கு சிலுவை கொடுத்தது எல்லாம் இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். விஜய் அவர்களுடைய சொந்தக்காரர்கள் பலபேர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவை எல்லாம் விஜய்யின் பணம் தான். அவர்களின் பினாமிகளாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். 

இதற்கெல்லாம் விஜய் சேதுபதி ஏன் கருத்து தெரிவிக்கிறார்?

விஜய் சேதுபதியும் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் தானே!

விஜய் சேதுபதியின் வாக்களர் அட்டையும் நீங்கள் வைத்துள்ளீர்களா? 

நாங்கள் ஏன் அவருடைய அட்டையை வைத்திருக்க வேண்டும். அவர் வேண்டுமானால் நான் கிருஸ்துவர் இல்லை என்று சொல்லட்டும். அல்லது நான் தமிழன் என்று சொல்லட்டும். விஜய் சேதுபதிக்கும் எங்களுக்கும் என்ன சண்டை இருக்கிறது.

இதுமாதிரியாக மக்கள் பக்கம் நிற்கும் நடிகர்களை தனிமைப்படுத்த மதச்சாயத்தை வேண்டும் என்றே பூசுகிறீர்களா?

விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும்  கிருஸ்துவராக இருக்கலாம், ஆனால் அந்த மதத்தை புரோமோட் செய்ய கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இவர்களின் எண்ணம் எதுவாக இருக்கிறது என்று மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம். 

இன்னொன்று நீங்கள் சொல்கின்ற பிரச்சனை தஞ்சாவூர் கோயிலுக்கு சீமான் எப்படி வரலாம் என்று கேட்டுள்ளீர்கள், அவர் ஏன் வரக்கூடாது? 

எல்லா கோயில்களிலும் இந்து அல்லாதவர்கள் கோயில் கருவறைக்குள் செல்லக்கூடாது என்று போர்ட் வைத்திருப்பார்கள். வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும். சீமான் கோயிலுக்கு வரலாம். ஆனால் செபஸ்டீன் சைமனாக அவர் இருக்கும் வரையில், அவர் கோயில் கருவறைக்கு செல்லக்கூடாது. அவர் தஞ்சை பெரிய கோயிலுக்கு யாரை அழைத்துச் செல்கிறார். முஸ்லிம் ஒருவரை அழைத்து செல்கிறார். அவர் இந்து மதத்தை பற்றியும், கோயில்களை பற்றியும், ராஜராஜ சோழனை பற்றியும் தவறாக பேசியவர். அவரை அழைத்து செல்வதை கண்டிக்கிறோம்.

 


 

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

5 நிமிடம் நிற்காத கைதட்டு - சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
viduthalai get standing ovation in Rotterdam Film Festival

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று (31.02.2024) திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.