Skip to main content

தேர்தல் தோல்வி எதிரொலி... அமைச்சர்களிடம் கோபமான எடப்பாடி... எடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

உள்ளாட்சி அமைப்புகளின் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியையும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அப்செட்டான எடப்பாடி, அமைச்சர்கள் பலருக்கும் செம டோஸ் கொடுத்திருக்கிறார்.

மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சிகளுக்கு 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தலை நடத்தியது மாநில தேர்தல் ஆணையம். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர மீதியுள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர்கள், 515 மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட 73,405 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதற்கான வாக்குகள் 2-ந்தேதி எண்ணப்பட்டன.
 

admk



அ.தி.மு.க.வுக்கே அதிக வெற்றி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு 10 மணிக்கெல்லாம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தலைமைச் செயலகம் வந்திருந்தனர். ஆனால், முடிவுகள் எதிர்பார்த்தமாதிரி வரவில்லை. அதனால் கோட்டையில் இருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார் எடப்பாடி. வீட்டிலிருந்தபடியே மாவட்ட அமைச்சர்களை தொடர்புகொண்டு எந்தெந்த மாவட்டத்தில் வீக்காக இருந்ததோ அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை வறுத்தெடுத்தார் எடப்பாடி.

வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முதல்நாள் (ஜனவரி 1) புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதற்காக எடப்பாடியின் இல்லத்துக்குச் சென்றார் ஓ.பி.எஸ். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். அந்த சந்திப்பில் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள்.
 

admk



இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய எடப்பாடி, "அதிகபட்சம் 40 சதவீத இடங்களைத்தான் நாம் கைப்பற்றுவோம்' என தகவல் வருகிறது. ஆனா, நம்முடைய அமைச்சர்களோ "80 சதவீதம் ஜெயிப்போம்'னு மார்தட்டிச் சொல்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை'' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.


இதனை ஆமோதித்த ஓ.பி.எஸ்., "எனக்கும் அப்படித்தான் தகவல் வருகிறது. ஆனாலும் அவ்வளவு மோசமாக போய்விடாது. 65 சதவீதம் வெற்றி கிடைக்கும். அப்படியே குறைந்தாலும் 50 சதவீதத்திற்கு குறையாது. நம்பிக்கையாக இருங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை தி.மு.க.வால் வெல்ல முடியாது. கட்சியும் சின்னமும் போட்டியிடுகிற மாவட்டம் மற்றும் ஒன்றிய கவுன்சில்களில் 50 சதவீதம் வெற்றி நமக்கு கிடைக்கும்' என தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடியோ, "கோவை, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, கரூர் என சில மாவட்டங்கள்தான் ஆறுதலாகத் தெரிகிறது. என்னுடைய சேலம் மாவட்டம்கூட எனக்கு நம்பிக்கையைத் தரவில்லை என சொல்ல, ஏன் கவலைப்படுகிறீர்கள்? கூட்டணி பலமும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் உழைப்பும் சேலம் உங்களை கைவிடாது' என நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பிப்போனார் ஓ.பி.எஸ்.


இதனையடுத்து, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராஜலெட்சுமி, செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், மாநில நிர்வாகிகளும் எடப்பாடியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தங்கமணி, வேலுமணியை தவிர மற்றவர்களிடம், "தேர்தல் முடிவுகள் குறித்து நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கீங்க. நீங்க சொன்ன மாதிரி முடிவுகள் வரலைன்னா என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க. இனி எந்த ஒரு தேர்தல் வந்தாலும் உங்களுடைய சிபாரிசுகளை ஏற்க போவதில்லை' என எச்சரித்தார் எடப்பாடி. இதனால் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஆடிப்போனார்கள்'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இந்த மனநிலையோடு இருந்த எடப்பாடி, பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வீழ்த்தி தி.மு.க. முன்னேறுகிறது என வந்துகொண்டிருந்த தகவல்களால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்தார். அதேபோல, அமைச்சர்கள் பலருக்கும் தேர்தல் முடிவுகள் கிலியை தந்திருக்கிறது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், "தேர்தலில் கோட்டைவிடும் அமைச்சர்களை பதவியிலிருந்து உடனடியாக நீக்கி அவர்களுக்கு தண்டனை கொடுப்பார் ஜெயலலிதா. அதே அஸ்திரத்தை எடுத்தால்தான் அமைச்சர்கள் திருந்துவார்கள் என எடப்பாடிக்கு உளவுத்துறை யோசனை சொல்லியிருக்கிறது''’ என்கின்றனர்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.