Skip to main content

"2024ம் ஆண்டு தேர்தல் பரம்பரை யுத்தம்; இன்று கழுத்தை நீட்டியுள்ளார்கள் நாளை நம்மையே வெளியேற்றுவார்கள்..." - திருமா பேச்சு

Published on 03/12/2022 | Edited on 05/12/2022

 

சத

 

சென்னையில் நடைபெற்ற தி.க தலைவர் வீரமணி அவர்களுடைய பிறந்தநாள் விழாவில் திருமா பேசியதாவது, "இன்றைக்கு ஆசிரியர்கள் அவர்களின் பிறந்தாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துக்கொண்டு இந்த தொண்ணூறு வயதில் தமிழ் இனத்துக்கும் தமிழக மக்களுக்கும் தனது எழுத்துகளாலும், கருத்துக்களாலும் தொடர்ந்து பணி செய்து வரும் அவர் இந்த வயதிலும் ஒருநாளும் சோர்ந்து போகவில்லை. இந்த ஓய்வறியா உழைப்பு எப்படி வந்தது என்பதற்கு அவர் பெரியாரை உதாரணமாகக் காட்டுகிறார்.முதுமை காலத்தில் பெரியார் பங்கெடுக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டால் சிரமமாக இருக்கே என்ற காரணத்திற்காக அவரிடம் நிகழ்ச்சியைத் தள்ளிவைத்துக் கொள்ளலாமா என்று தான் கேட்டு அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததை அருகிலிருந்து பார்த்த எனக்கு எப்படி ஓய்வெடுக்கத் தோன்றும் என்று தனது பிறந்தநாள் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

 

பெரியாரை அருகிலிருந்து பார்த்த காரணத்தாலோ என்னவோ அவரைப்போல் தமிழர்களுக்காக ஓய்வறியாது இந்த வயதிலும் தொடர்ந்து உழைத்து வருகிறார். தனது பிறந்தநாள் செய்தியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் என்பது மிக முக்கியமானது. வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது பரம்பரை யுத்தத்திற்கான தேர்தல் என்று ஒற்றை வரியில் தெரிவித்துள்ளார். எவ்வளவு தீவிரமாக யோசித்திருந்தால் இதை அவர் கூறியிருப்பார், அவர்கள் ஒன்றும் தேர்தல் அரசியலில் நாட்டம் கொண்டவர்கள் இல்லை; வேட்பாளர்களைத் தேர்தலிலே நிறுத்தப்போவதுமில்லை. ஆனால் இந்த நாடு சனாதன சாக்கடையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் மிக உறுதியாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

 

இன்றைக்கு அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அது தற்போது பலருக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்துள்ளது. அதனால் எவ்வாறு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று அனுதினமும் யோசிக்கிறார்கள். இன்றைக்குப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு என்று இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார்கள். அதைக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் இதனால் பயனடையட்டும் என்ற அடிப்படையில் அதனை ஆதரிக்கிறார்கள். ஆனால் பாஜகவின் பார்வை என்பது இந்த விஷயத்தில் முற்றிலும் வேறானது. 

 

முற்பட்ட வகுப்பினர் படிக்க நிதி வேண்டும் என்றால் கொடுங்கள்; நிலம் வேண்டுமென்றால் கொடுங்கள்; நாங்களும் அதை ஆதரிக்கிறோம். இத்தனை ஆண்டுகள் நாங்கள்தானே மாடு மேய்த்தோம், களை எடுத்தோம், சாணி வாரினோம், தற்போது அதை அவர்களும் செய்யட்டும். இது எதுவுமே அவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தெரியாதே.  ஆனால் தற்போது இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை வைத்து அளவீடு செய்ய வேண்டிய ஒன்றல்ல, அது முற்றிலும் தவறு என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இன்றைக்குப் பொருளாதார இட ஒதுக்கீட்டை நாம் எதிர்க்காமல் அனுமதித்தால் நாளை இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நம்முடைய இதர உரிமைகள் அனைத்தையும் நம்மிடமிருந்து பறித்து விடுவார்கள். 

 

ஆகையால் நாம் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்துகொண்டு இருக்க முடியாது. இதற்கு நாம் அமைதியாக இருந்தோம் என்றால் நாளை சமூகநீதியை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு நாம் அமைதியாக இருந்துவிட்டோம் என்றால் நாமும் அதில் குற்றவாளிகளாக ஆகிவிடுவோம். அந்த தவற்றை ஒருபோதும் செய்யக்கூடாது. இந்த உயர்சாதி இட ஒதுக்கீடு என்ற ஒட்டகம் சமூக நீதி என்ற கூடாரத்தில் தற்போது தலையை நீட்டுகிறது. நாளை அது நம்மை வெளியேற்றி விடும் என்பது மட்டும் நிச்சயம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீமான் கேட்ட சின்னம் மதிமுகவிற்கு; கிட்டத்தட்ட க்ரீன் சிக்னலில் விசிக

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Seeman asked for the symbol for Mdmk; Almost at the green signal for vck

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் இந்த நிலையில், விசிகவிற்கு பானை சின்னம் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னதாக மதிமுகவும் பம்பரம் சின்னம் வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் மறுத்திருந்த நிலையில் தற்போது அண்மை செய்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட பானை சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலின் போதே துரை வைகோ மூன்று சின்னங்களை வலியுறுத்தி இருந்தார். அதில் முதல் சின்னமாக பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி சின்னம், மூன்றாவதாக கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருந்தார். ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், மாற்று சின்னத்தை பெற மதிமுக முயன்று வருகிறது.

துரை வைகோ மாற்றாக கேட்டிருக்கும் தீப்பெட்டி சின்னத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கேட்டுள்ளார். மதிமுக அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருந்தாலும் பதிவுபெற்ற அரசியல் கட்சியாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என மதிமுக வட்டாரம் எதிர்பார்த்து காத்துள்ளது.

அதேபோல சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக்கும் விசிக இரண்டு தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனைத் தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் பானை சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் பானை சின்னம் கேட்டவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் திருமாவளவனுக்கு பானை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிகவின் வேட்பாளர் ரவிக்குமாரை தவிர வேறு யாரும் பானை சின்னம் கேட்காததால் விழுப்புரம் தொகுதிக்கும் பானை சின்னம் கிடைக்க வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மதிமுகவுக்கு தற்போது கிடைக்கப் போவதாக இருக்கும் தீப்பெட்டி சின்னத்தை இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி கேட்டிருந்ததாகவும், கிடைக்காமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

'நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் மன்றம் புறக்கணிக்கும்' - திருமா கருத்து

Published on 12/12/2023 | Edited on 12/12/2023

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 'The People's Forum will ignore the order of the court'-Thirumavalavan

 

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து என்ற தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தேன். காஷ்மீருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.