Skip to main content

“நாங்க பொழச்சது எங்களாலயே நம்ப முடியல” - விஜி சந்திரசேகர் பகிரும் திக்திக் நிமிடங்கள்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 Viji Chandrasekhar Interview

 

சினிமா முதல் சீரியல் வரை தன்னுடைய சிறந்த நடிப்பால் மக்களின் மனங்களை வென்று வரும் நடிகை விஜி சந்திரசேகர் தன்னுடைய பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

வீடு என்றால் பிரம்மாண்டமாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. எளிமையான வீடாக இருந்தாலும் அதை நாம் அழகாகப் பார்த்துக்கொண்டால் போதும். எங்கள் வீட்டின் முகப்பில் மூன்று மதங்களின் குறியீடுகளும் இருக்கும். அனைத்துக்கும் ஒரு வேல்யூ இருக்கிறது. அனைத்து கடவுள்களும் இணைந்து எங்களைக் காப்பாற்றுகின்றனர். சுனாமி காலத்தின்போது எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்ததை மறக்கவே முடியாது. உலகம் அழியப் போகிறதோ என்கிற எண்ணம் கூட அப்போது எனக்கு ஏற்பட்டது.

 

அன்று காலை வீட்டுக்குள் ஒரு அதிர்வு ஏற்படுவதை உணர முடிந்தது. சுனாமி என்கிற வார்த்தை தெரியாவிட்டாலும் இது கடலுக்கு அடியில் ஏற்படுகிற பூகம்பம் என்பதை என்னுடைய கணவர் கூறினார். அன்று எங்கள் வீட்டு செக்யூரிட்டியும் ஊருக்குச் சென்றுவிட்டார். அதனால் எப்போதும் பீச்சுக்கு செல்லும் குழந்தைகள் அன்று செல்லவில்லை என்பது மகிழ்ச்சி. அன்று ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று என்னுடைய உள்ளுணர்வு சொன்னது. விரைவாக எங்காவது வெளியே சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது. 

 

டபடபவென்று ஒரு சத்தம் கேட்டது. கிட்டத்தட்ட ஐந்து அடி வரை தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. மாடியில் இருந்து பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஒரு அலையை அதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அருகில் இருந்த மசூதியைப் பார்த்து "அல்லா, இந்த உலகத்தைக் காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டோம். தண்ணீரில் புத்தகங்கள், சேர் எல்லாம் அடித்துச் சென்றது. எங்கள் வீட்டில் இருந்த பீச் மணலை அகற்றுவதற்கு நான்கு நாட்கள் ஆனது. 

 

அருகில் இருக்கும் சின்ன கிராமத்திற்கு அந்த நேரத்தில் நடிகர் சூர்யா அடிப்படைத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வழங்கினார். நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். என்னுடைய கணவரின் சிறந்த குணங்கள் எனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. கடன் வாங்குவது அவருக்குப் பிடிக்காது. சேமிப்பை எப்போதும் ஊக்கப்படுத்துவார். சுனாமி நினைவுகள் இன்றும் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.