Skip to main content

'நானா படேகர் நடிகைகளை அடித்து இருக்கிறார்' - காலா வில்லன் மீது விஷால் பட நாயகி பாலியல் புகார்

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
tanushree

 

நடிகைகள் பலரும் தைரியமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வாய் திறந்து வரும் நிலையில் தற்போது விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த தனுஸ்ரீ தத்தாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து பேசியபோது... "கடந்த 2008ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். என் குடும்பத்தினருடன் சென்றபோது என்னை தாக்கினார்கள்.

 

 

 

நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது" என்றார்.  மேலும் இதை தொடர்ந்து கடந்த 2005ஆம் ஆண்டு, தான் சினிமாவில் அறிமுகமாகும் போது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தன்னை ஆடையை களைந்து விட்டு ஹீரோ முன் நடனமாட கூறியதாகவும் புகார் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தனுஸ்ரீ தத்தா கூறிய இந்த பாலியல் புகாருக்கு பல்வேறு பாலிவுட் நடசத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்