Skip to main content

இதுவரை சினிமா... இப்போது அரசியல்... ஸ்ரீரெட்டியின் அடுத்த புகார்!

Published on 09/08/2018 | Edited on 09/08/2018
sri reddy

 

 

 

தெலுங்கு திரை உலகை சேர்ந்தவர்கள் மீது பாலியல் கூறி அரைநிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமான நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது பாலியல் புகார் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.... "காமெடி பிருத்வி... ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் ரோடு 10ஆம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா...?" என்று கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது சினிமா உலகம் மற்றுமல்லாமல் தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

sri reddy

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்