Skip to main content

"வாழ்க்கைத் துணை விவகாரத்தில் உன் மனதை மாற்ற முயற்சித்தேன்..." ஷாலு ஷம்மு பரபரப்பு பதிவு! 

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

shalu shammu

 

பிரபல சின்னத்திரை நடிகையான வி.ஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காகப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வி.ஜே சித்ரா, தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு, நள்ளிரவில் தான் தங்கியிருந்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்குத் திரும்பியுள்ளார். அதனையடுத்து, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முகத்தில் நகக் கீறல் மற்றும் காயம் இருந்ததால், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓட்டலில் அவருடன் தங்கியிருந்த அவரது வருங்கால கணவர் ஹேம்நாத்தும் விசாரணையின் பிடியில் உள்ளார்.

 

வி.ஜே சித்ராவின் மறைவையடுத்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இரங்கல் தெரிவித்து நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள பதிவில், "உன்னை இந்த வகையில் இழப்பேன் என்று நான் எப்போதும் நினைத்தது இல்லை. கடைசியாக நான் உன்னுடன் பேசும்போது, அந்தத் தொலைப்பேசி அழைப்பின் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கைத்துணை தொடர்பான விவகாரத்தில், உன் மனதை மாற்ற முயற்சி செய்தேன். நீ அதை ஏற்கத் தயாராக இல்லை. இதுதான் நடக்கும் என எனக்குத் தெரிந்திருந்தால், நான் முயற்சி செய்வதை நிறுத்தியிருக்கமாட்டேன். உன்னை இழந்த நேரத்தில் எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது சித்து" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்