Skip to main content

“சாதனையை முறியடிக்க சில காலம் எடுக்கலாம்”- ‘பிகில்’ தயாரிப்பாளர்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

archana


விஜய்-அட்லீ கூட்டணியில் உருவான மூன்றாவது படம் 'பிகில்'. இது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

இதனிடையே இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி என்றும், ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு ரூ. 20 கோடி நஷ்டம் என்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதற்குப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அப்போதே மறுப்பு தெரிவித்தார்.

 

இந்நிலையில் தற்போது லாக்டவுனில் 'பிகில்' பட வசூல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “பிகில் படத்தின் மூலம் எங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று நான் கூறியதாகச் சிலர் ஒரு அறிக்கையைப் பதிவிட்டு வருகின்றனர். அது உண்மையல்ல. நாங்கள் லாபம் ஈட்டி, அதற்கான வரிகளையும் கட்டியிருக்கிறோம். 'பிகில்' ஒரு பிளாக்பஸ்டர், அதுமட்டுமின்றி இன்னொரு படம் 'பிகில்' படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்க சில காலம் எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெங்கட் பிரபு பிறந்தநாள்; தளபதி 68 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

venkat prabu birthday thalapathy 68 update

 

தமிழ் சினிமாவில் தன் காமெடி கலந்த கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்போது விஜய்யை வைத்து, 'தளபதி 68' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இந்த படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜீனியஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் நிறைய வித்தியாசமான ஷாட்டுகள் மற்றும் ஷெட்யூல்கள் தளபதி 68ல் இருக்கிறது. தாய்லாந்தில் ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கினோம், அதுவும் இரவில் படமாக்கப்பட்டது. அதனால் வெங்கட் பிரபு அவரது பிறந்தநாள் அன்று விடுமுறை எடுத்துக்கொள்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘தளபதி 68’ அப்டேட்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Venkat Prabhu update  about thalapathy-68

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' எனத் தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பர், அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.  

 

இந்நிலையில் தளபதி 68 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ‘எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்’ என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.