Skip to main content

"அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்..! இப்போதைக்கு எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்" - லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020
grhdh

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா காரணமாக மாஸ்டர் பட வெளியீடு தள்ளவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகுமா..? ஆகாதா..? என்ற குழப்பம் ஒருபக்கம் நிலவி வரும் நிலையில் மாஸ்டர் பட அப்டேட் குறித்து பேசியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதில்...

 

"மாஸ்டர் படம் கண்டிப்பாக ஓடிடியில் வெளியாகாது! எல்லோரும் மாஸ்டர் குறித்து அப்டேட் கேட்கிறார்கள். அதை கொடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். அதெல்லாமே திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், கோவிட் பிரச்சனை எப்போது முடியும் என்பதை பொறுத்துத்தான் இருக்கிறது. அவை முடிவான பிறகு 'மாஸ்டர்' குறித்த அப்டேட்ஸ் உங்களுக்கு சரியாக வரும். இப்போதைக்கு, அனைவரும் பாதுகாப்பாக, வீட்டில் இருங்கள்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்