Skip to main content

''அவர் ஒரு வலுவான நேர்மறை மனிதர்" - பாடகி சித்ரா வேதனை!

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
gag

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தது. உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தது. 

 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இந்நிலையில் பாடகி சித்ரா எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"எஸ்.பி.பி சார் ஒரு வலுவான & நேர்மறை மனிதர். தற்போதைய சூழ்நிலையிலிருந்து அவர் விரைவில் வெளியே வருவார் என்று நான் நம்புகிறேன். சார் விரைவில் நோயிலிருந்து மீள பிரார்த்தனைகள் செய்கிறேன்" என கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்