Skip to main content

கணவனின் தோழியின் புகைப்படம் பார்த்ததும் மயங்கி விழுந்த மனைவி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 33

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
 detective-malathis-investigation-33

தான் கையாண்ட துப்பறியும் வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கணவரை கண்காணிக்கச் சொன்ன மனைவியைப் பற்றிய தகவல்களை விவரிக்கிறார்.

இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து கணவர் தன் மீது பாசமாக இல்லை என்றும், எதற்கெடுத்தாலும் கோவப்பட்டு திட்டுகிறார் என்றும் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று அவரைப் பின் தொடர்ந்து தகவல் தர வேண்டும் என்று ஒரு பெண் வந்தார்.

நாமும் அவரது கணவரின் தகவலைப் பெற்றுக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தோம். தினமும் அலுவலகம் போகிறவர் மாலை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் போகிறார். கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு வந்து விடுகிறார். எங்களால் அந்த பிளாட்டுக்குள் போய் அங்கே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க முடியவில்லை. பத்து நாட்களாக காத்திருந்தோம்.

ஒரு நாள் அந்த கணவர் வேறொரு பெண்ணோடு மகாபலிபுரம் சென்றார். நாமும் அவரைப் பின் தொடர்ந்து அந்த பெண்ணோடு இருக்கும் படங்களை எடுத்து வந்து நமக்கு வழக்கு கொடுத்த பெண்ணிற்கு தகவல் சொல்லி அலுவலகத்திற்கு வரச் சொன்னோம். இரண்டாவது குழந்தை பிறந்து ஆறு மாதம்தான் ஆனதால் அவரிடம், உங்க கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்பதை பக்குவமாக எடுத்துச் சொன்னோம்.

தகவலைக் கேட்டதும் வருந்தியவருக்கு ஆறுதல் சொன்னோம், இதெல்லாம் பெரியவர்களை வைத்துப் பேசி சரி செய்யக்கூடிய பிரச்சனைதான் என்றோம். சரி என்று கேட்டுக்கொண்டு அந்த பெண்ணை போட்டோ எடுத்தீர்களா என்றார், எடுத்திருக்கிறோம் என்று காட்டினோம், போட்டோவைப் பார்த்தவர் மயங்கி விழுந்து விட்டார்.

முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி என்னாச்சு என்றவர், நமக்கு ஒரு அதிர்ச்சி தகவல் சொன்னார், தன் கணவரோடு படத்தில் இருப்பது தன்னோடு கூடப் பிறந்த தங்கை என்று சொன்னார். தன்னுடைய பிரசவத்திற்காக கொஞ்ச நாள் உதவிக்கு இருந்தவர், பிறகு ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டார் என்றார். ஆனால் அவர் ஹாஸ்டலுக்கு செல்லாமல் தனி பிளாட் எடுத்து தங்கியிருப்பது கண்டறிந்து சொன்னோம். பெரியவர்களை வைத்துப் பேசி சரி செய்து கொள்ளுங்கள் என்று வழக்கை முடித்தோம்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.