Skip to main content

அதற்கு அவர் தகுதியில்லை; கணவனை குற்றம் சுமத்திய தோல் நோய் மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 50

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
advocate-santhakumaris-valakku-en-50

தான் சந்தித்த வழக்குகளை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக நம்மோடு வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். இதுவரை 49 வழக்குகள் குறித்து நம்மிடையே விவரித்திருக்கிறார். இது 50வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த, என் மகனை போன்றவரின் வழக்கு இது. நான் மிகவும் போராடி ஜெயித்த வழக்கு என்றாலும் மிகையாகாது. இதைப் பற்றியெல்லாம் பேசலாமா என்று நிறைய பேர் தயங்குவார்கள். ஆனால் இது நிறைய பேருக்கு பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன். இருவீட்டு பெற்றோர்களின் சம்மதத்தோடு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இருவருக்கும் மிகவும் பிடித்திருந்து ஆரம்பகால வாழ்க்கை வழக்கம் போல நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் போகப் போக அந்த பெண்ணின் குணாதிசயங்கள் வித்தியாசமாக மாற ஆரம்பித்தது. எல்லோரையும் பற்றி அவங்க இப்படிப்பட்டவங்க, இவங்க அப்படிப்பட்டவங்க என்று புறம் பேசுதல் அந்த பையனின் அம்மாவிற்கு வித்தியாசமாக இருந்தது. அந்த பெண்ணின் கோணத்தில் எல்லாரைப் பற்றியும் தப்பாக பேசுதல் என்பது பையனின் குடும்பத்திற்கு நெருடலாக இருந்தது. 

அந்த பெண் ஒருநாள் தன் கணவனிடம், தன் அப்பாவின் கம்பெனிக்காக நாற்பது லட்சம் பணம் கேட்கிறாள். அந்த பையனும் தயங்கி முதலில் நம் வாழ்க்கையை பார்ப்போம், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை மற்றும் கொடுப்பதும் சரியாக இருக்குமா என்றும் தெரியவில்லை என்று சொல்லிவிடுகிறார். ஆனால் அந்த பெண்ணை, கணவன் எந்த குறையும் இல்லாமல் நன்றாக வசதியாக செலவு செய்து தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இந்த பெண்ணோ, இங்கே நடக்கும் ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி, ஒரு கதை போல மற்றவர்களிடம் சொல்கிறாள். தன் பிறந்த வீட்டில், இவர்கள் நிறைய வேலை வாங்குகிறார்கள் என்று சொல்கிறாள். ஆனால் இவர்கள் நல்ல வசதியான குடும்பம், எல்லாவற்றிற்கும் மிஷின் இருக்கிறது, வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். இவளை வேலை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன் இப்படி பேசுகிறாள் என்று கவலைப்படுகிறார்கள். இப்படியே போகப் போக இருவருக்கும்  சில கருத்து வேறுபாடுகள் வருகிறது.

தன் கணவன் சிகரெட் பிடிப்பது தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறாள். பாத்ரூமில் ஏழெட்டு சோப்புகள் பயன்படுத்துவதைப் பார்த்து கேட்டபோது, இது எல்லாமே என் தோல் பொலிவுக்கு, அழகுக்கு என்று சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் அவை அனைத்துமே தோல் நோய்க்கான மருந்து சோப்புகள். இது போக அந்த பையனுக்கும் அவளுக்கும் நிறைய இடைவெளி இருப்பதைக் கண்ட அவரது அம்மா, என்னவென்று விசாரிக்க, அவள் மீது ஒருவகை துர்நாற்றம் வருகிறது. பிடிக்கவில்லை என்றும் ஏதோ ஒரு தோல் நோய் இருப்பதாக சொல்கிறான். இதனால் அந்த பெண்ணோ சில நாட்களுக்கு அம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறாள். சரி செய்துவிடலாம் என்று சொல்லி அவளை அழைத்தாலும் வரவில்லை.

அம்மா வீட்டுக்கு சென்றவளோ, அவளது குடும்பத்தினரிடம் தன் கணவனுக்கு பாலியல் நாட்டம் இல்லை, குடும்பம் நடத்த அவரால் முடியவில்லை. அதற்கு அவர் ஏற்றவர் இல்லை அதனால் என் மீது தோல் பிரச்சனை என்று திசை திருப்பி இருக்கிறார் என்று அப்படியே கதையை மாற்றி விடுகிறாள். இதற்கு பின்பு தான் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் என்னைப் பார்க்க வந்தனர். அந்த பையனுக்கும் தன்னை ஆண்மை இல்லை என்றெல்லாம் சொல்லியது மிகவும் பாதித்து இருந்தது. வாழவும் விருப்பமில்லை என்று தெரிந்து கொண்டு டைவர்ஸ் கேஸ் போடலாம் என்று பதிவு செய்கிறோம். உடனே அந்த பெண் அங்கிருந்து சேர்ந்து வாழ வேண்டும் என்றும், எங்களுடைய 800 பவுன் நகை அவர்களிடம் இருக்கிறது. இப்போது அவர்கள் என்னை துரத்தவே இப்படி செய்கிறார்கள் என்று ஒரு வழக்கு போடுகிறாள். இப்படி இரண்டு வழக்குகளும் சேர்ந்து சென்னை நீதிமன்றத்திற்கு வருகிறது. நியாயப்படி பார்த்தால், அந்த பையனுக்கு ஆண்மை இல்லை என்றால், சேர்ந்து வாழ வேண்டும் என்று எப்படி கேஸ் போட முடியும், மேலும் அவள்தான் இதை நிரூபிக்க வேண்டும் என்று புகார் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த பையன் தான் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் தான் நிரூபிக்க தயாராக இருப்பதாக சொல்லிவிடுகிறார்.  

இப்படி இருக்க, அந்த தம்பியிடம் இருந்து ஒரு தகவல் கேஸ்க்கு உபயோகமான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக வந்தது. என்னவென்றால் அவர்கள் இருவரும் தங்கள் பெட்ரூமில் திருமணமான புதிதில் உபயோகப்படுத்திய போர்வை கிடைத்திருக்கிறது என்று. அதில் இருவரது உடல் திரவமும் இருக்க சாத்திய கூறு இருக்க, போதிய ஆதாரம் கிடைக்கவே அதை நாங்கள் கோர்ட்டில் சமர்ப்பித்து மேலே தொடர அனுமதி கேட்டோம். நீதிபதி அதனை டி.என்.ஏ பரிசோதனைக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு எழுதி தந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணின் தரப்பிலிருந்து, இது ஏமாற்று வேலை, வேறொருவருடையதை வைத்து போலியானதாக திரிக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். எங்களுக்கு பரிசோதனை முடிவில், அதில் விந்து இருப்பதற்கான ஆதாரமும் உறுதி ஆகி எங்களுக்கு சாதகமாகத்தான் வந்தது. 

அடுத்ததாக பெண்ணும் பையனும் ரத்த மாதிரியை டெஸ்ட்க்கு கொடுக்கும்படி வந்தது. இருவர் மட்டும் அங்கே இருந்தால், நிலைமை பிரச்சனையில் முடியலாம் என்று எங்கள் பக்கத்திற்கு ஒரு ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தோம். ஆனாலும் அந்த பெண் ரத்தத்தை கொடுக்கவே இல்லை. ஏனென்றால், டாக்டரும் அந்த பையனும் சிரித்து சிரித்து பேசுகிறார்கள், இதில் சதி இருக்கிறது. எனவே நான் என்னுடைய ரத்த மாதிரியை கொடுக்கமாட்டேன் என்று ஒரே ரகளை. சரி என்று அவள் வழியிலேயே உனக்கு சந்தேகம் இருந்தால் வேறு மருத்துவமனை கூட போகலாம் அங்கே டெஸ்ட்க்கு கொடு என்றால் அதற்கும் வழி இல்லை. இதிலேயே பெரிய சந்தேகம் உறுதி ஆகி, நீதிபதி இந்த வழக்கில் பெண் வைக்கும் எந்த வித குற்றச்சாட்டிலும் உண்மையே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து வைத்தார். அவர்கள் பக்கம் கேட்டிருந்த தங்க நகை புகாருக்கு, இந்த பையன் வீட்டிலும் முழுமையாக கொடுத்து விடுவதாக சொல்லிவிட்டனர். 

அதற்குப் பின்னே தான் அந்த பெண் இறங்கி வந்து, வக்கீலை அனுப்பி இருபக்கமும் மியூச்சுவல் டிவோர்ஸ் போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டனர். கடைசியாகத் தான் எல்லாம் முடிந்தது. ஆனால் இதில் அவமானம் மிகவும் ஏற்பட்டது அந்த பையனுக்கே. ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த விஷயத்தில் இப்படி ஒரு புகார் வைத்தால் எப்படி வெளியே தலை நிமிர்ந்து போக முடியும். எனவே ஒரு பையனுக்கு ஆண்மை இல்லை என்றெல்லாம் புகார் வைத்தால் கண்டிப்பாக பயப்படவோ தயங்கவோ தேவையில்லை. உங்கள் மீது மருத்துவப்பூர்வமாக ஆதாரம் இருந்தால், நிச்சயமாக கோர்ட்டில் கேஸ் போட்டு வெற்றி பெறலாம்.

Next Story

கணவனுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைத்த மனைவி; கதறிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 54

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
advocate-santhakumaris-valakku-en-54

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சரண் என்பவருடய வழக்கு இது. ஒரே பையன், பிஸினஸ் பார்க்கிறார். ஜாதக பொருத்தம் பார்த்து ஒரு பெண் அமைந்து, பெரியோர்களால் நிச்சயத் தேதி முடிவாகிறது. ஆனால், பெண்ணோ நிச்சயத்தில் அவ்வளவாக விருப்பம் காட்டாமல் இருக்கிறாள். ஒரு நெருக்கம் இல்லை. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்கும்போதும் கூட சரியான ஒத்துழைப்பு இல்லை. ஒருவித வெறுமையாக இருக்கிறாள். திருமணம் பின்பு சரியாகி விடும் என்று சரண் நினைக்கிறார். முதலிரவிலும் தங்களுக்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் மிகவும் கோபமாக தூக்கி வீசுகிறாள். இதெல்லாம் சரணுக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு அன்பாக பேசியும் அவளிடம் சரியான பதிலில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை சந்தேகித்து சரணுடைய அப்பா அவனை விசாரிக்கிறார். மனம் தாங்காமல் சரணும் சொல்லி விடுகிறார். அவர் பெண் வீட்டினருக்கும் சொல்லி பெண்ணின் தந்தை அவளிடம் விசாரிக்க அவள் ஏதோ சமாளித்து விடுகிறாள். 

தேனிலவுக்கு அந்த பெண் தன் தம்பி இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்ள அங்கேயே போகிறார்கள். அங்கும் தம்பியுடனே சுற்றுவது என்று கூட வருகிறான். இருவரும் அங்கே மனமில்லை என்றாலும் சேர்ந்து இருந்து விடுகிறார்கள். அதற்கு பின் சென்னையில் தனி வீடு பார்த்து போய் விடுகிறார்கள். அங்கே அவள் கர்ப்பமாகிறாள். சரண் மற்றும் அவரது பெற்றோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அந்த பெண்ணிற்கு இந்த குழந்தை வேண்டாம் என்றும் ஒரு இரண்டு வருடம் நன்கு சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெற்று கொள்ளலாம் என்று அழிக்க நினைக்கிறாள். இது சரணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரண் பெற்றோர் பார்க்க வந்திருந்த போதும் கூட அவர்களிடம் சரியாக முகம் குடுத்து பேசவில்லை. அவள் பின்னர் தன் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். போனவள் பத்து நாட்கள் கழித்து வருகிறாள். டாக்டர் செக்கப் கேட்டதற்கு தன் குழந்தை நிற்கவில்லை என்று சொல்லி விடுகிறாள். 

அதில் ஆரம்பித்து இரு வீட்டிலும் புரிதல் இல்லாமல் போய் அடிக்கடி பிரச்சனை, தகராறு என்று ஆகிறது. இரண்டு மாதம் அப்படி போக, கடைசியில் அந்த பெண் சரணுடன் போய் வாழ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். பெற்றவர்களும் சரணும் சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி, இனிமேல் புதிதாக சேர்ந்து வாழலாம் என்று பலவாறு பேசி அனுப்பி வைக்கிறார்கள். அவனுடன் வந்த பின்னர் தன் தோழிக்கு கல்யாணம் பெங்களூரில் நடக்கிறது. போய் பார்க்கப் போகிறேன் என்று நகையை லாக்கரில் இருந்து எடுக்கிறாள். மாமனார் வந்து பார்த்த போது அவரிடம் சொல்ல, அவர் எடுத்து போகும் நகையை குறித்து வைக்க சொல்கிறார். அவரிடம் நீங்கள் எனக்கு போட்ட வைர நெக்லஸ் ரொம்ப பிடித்தது மாமா. நான் என்ன என் நகை, உங்கள் நகை என்று பிரித்தா பார்க்கிறேன் என்று அன்பாக பேச அவரும் இறங்கி எது வேண்டுமோ எடுத்து செல்லுமாறு சொல்கிறார். ஆனால் இவளோ அவர்கள் நகையை வைத்து விட்டு தன் அம்மா வீட்டில் போட்ட நகையை எடுப்பது போல நடித்து  பையன் வீட்டு நகை எல்லாமே எடுத்து சென்று விடுகிறாள். அதன் பின்னர் திரும்பி இங்கே வரவே இல்லை. 

இரண்டு வருடம் மேல் ஆனது. அடுத்து சரண் குடும்பம் மேல் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, என்று எல்லா கேஸ் போட்டு, பெண்ணின் அப்பா சரணுக்கு கார் வாங்கிக்கொள்ள சொல்லி அன்பளிப்பாக கொடுத்த இருபது லட்சத்தையும் இவர்கள் வேண்டுமென்றே வாங்கி கொண்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக வேறு புகார்கள். போலீஸ் கைது செய்யும் வரை வழக்கு ஆகிறது. எல்லாருக்கும் பெயில் வாங்கி, ஸ்டேஷனில் கையெழுத்து வாங்கி வழக்கு மேல் வழக்கு போட்டு இறுதியில் சரண் வெறுத்து போய் அவரே விவாகரத்து பதிவு செய்தார். அந்த பெண்ணிற்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றாலும் அவர்கள் மேல் போட்ட எல்லா வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ஐந்து கோடி பணம் வேண்டும் என்று கேட்டாள். மீடியேஷன் போட்டும் பலனில்லை. வழக்கை வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி அங்கு மீண்டும் மீடியேஷன் போட்டு பேசியதில் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு ஒத்துக்கொண்டு மியூச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்பொழுது சரண் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அந்த பெண் தன் தோழியுடன் சேர்ந்து ஏதோ கடை வைத்திருக்கிறாள் என்று தெரிய வந்தது.

Next Story

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்ததால் பிரச்சனை; கதறிய அப்பாவி கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 53

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 advocate-santhakumaris-valakku-en-53

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அவசரமாக ஒரு நபர் ஒருநாள் என்னுடைய அலுவலகத்தில் வந்திருந்தார், அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்கமுடியாது என்பதால், நான் அனுமதிக்காமல் இருக்க, சிறிது நாள் கழித்து அப்பாயின்மென்ட் வாங்கியபின் நான் அவரை சந்தித்தேன். அவரும் மிக பதற்றமாக என்னிடம் பேசினார். தான் ஒரு விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தவர் என்றும், இப்போது அந்த பெண் தன்னை வீட்டினுள்ளே விடுவதில்லை என்றும் பதற்றமாக பேசினார். என்ன ஆனது என்று கேட்டபின் தான் சொல்ல ஆரம்பித்தார். 

அந்த பெண்ணை அவர் முதலில் ஒரு தெரிந்த விழாவில் சந்தித்ததாகவும், பிடித்திருந்ததால் விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே கோர்ட்டில் விவாகரத்து கேஸ் போய்க்கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது. பின்னர் கேஸ் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவளுக்கு முதல் கணவனால் வந்த குழந்தையையும் ஏற்று கொள்கிறார். திருமணம் ஆன பின்னர் இவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. இருவரையும் அவர் ஒன்றாக தான் வைத்து வளர்க்கிறார், ஆனால் மற்றவர்கள் சும்மா இல்லாது, அவர் தன்னுடைய குழந்தையை மட்டும் எப்படி கொஞ்சுகிறார் பார். தன் மகனை மட்டும் நன்றாக வளர்க்கிறார் என்று ஏற்றி விட, இவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி விடுகிறது.

இவர் வெளியில் சென்று சாதாரணமாக  நண்பர்கள் என்று சந்தித்து  வந்தாலும், உன் கணவனை நான் வேறொரு பார்ட்டியில் பார்த்தேன் என்றெல்லாம் அவளின் நண்பர்கள் கூற கூற இவளுக்கு தேவையில்லாத சந்தேகம் தானாக வருகிறது. வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் ஒழுங்காக பேசுவதில்லை, எது பேசினாலும் சரியாக பதிலளிப்பதில்லை. பார்ட்டி என்று சென்று வருவதை சொல்லிக் காட்ட, இவர் தனக்கு அது வெறும் பொழுதுபோக்கு தான் என்று சொல்லிவிட்டு, அடுத்தமுறை அவளையும் கூட்டி போவதாகச் சொல்கிறார். ஆனால் அவளை அழைத்துப் போக ஆபிசில் அதுவரை எந்த பார்டியும் நடக்கவில்லை. அதனை புரிந்துகொள்ளாமல் மேலும் கோவப்படுகிறாள்.

எல்லாரும் இல்லாததை சொல்ல சொல்ல, அந்த முதல் கணவனின் பதினாறு வயது மகன் அவரை வெறுக்கிறான். ஒருநாள் குடித்துவிட்டு வந்ததில், அந்த பதின்வயது பையன் மரியாதை இல்லாமல் பேச பிரச்சனை பெருசாக ஆகிறது. 

கையை ஓங்குவது என்று அவரை அடக்கும் அதிகாரம் எடுத்துக் கொள்கிறான். அவருக்கென்று அவருடைய காரும் கொடுக்காமல், வாங்கிக் கொள்வது, பணத்தை எண்ணி பார்ப்பது போன்ற வேலையை எல்லாம் செய்கிறான். எல்லை மீறி அடிப்பது வரை ஆகிறது. ஒருநாள் அந்த பையனே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். தந்தை தடுக்க போய், பாட்டிலாலே அடித்து விடுகிறான். சின்ன பையனையும் அடக்கி வைத்திருக்கிறார்கள். இவருக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று தெரிய வருகிறது. வீட்டில் பணம் வைப்பதை நிறுத்தி விடுகிறார். சாப்பாடு போடுவது, கவனிக்கிறது என்று கிடையாது. தகராறு ஆகி வெளியே வந்து அப்போது தான் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று என்னிடம் வந்தார். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்ல, அங்கு கவனிக்காததால், கமிஷனருக்கு மெயில் அனுப்பினார். பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

காவலர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்க, இதனால் மேலும் அந்த அம்மா, பையன் என்று இவரிடம் அதிகமாக தகராறு செய்ய, மீண்டும் என்னிடம் வந்து என்ன செய்வது என்று நின்றார். எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியை வைத்து அவர்கள் தரப்பில் பேச வைக்க ஏற்பாடு செய்யச் சொல்ல, அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் முடிவானது. போய் பேசவைப்பது என்று வாரக்கணக்கு ஆனது. ஆனாலும் அந்த அம்மாவிற்கு இவருடன் வாழ விருப்பமே இல்லை என்று தெரிய வந்தது. சரி வாழப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாமே என்று பேச, நான் இவரை விட்டு வெளியே தெருவிலா நிற்க முடியும். எனக்கும், என் பையனுக்கும் செய்ய வேண்டிய செட்டில்மென்டை கொடுக்கச் சொல்லுங்கள் என்றாள். சட்டப்படி அந்த பையனுக்கு பதினெட்டு வயது ஆனதால், அவனுக்கு இவர் செட்டில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவனே தான் வேலைக்கு போய் பார்த்து கொள்ளவேண்டும்.  பையனுக்கு நான் லீகல் கார்டியனாக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

எனக்கு நிரந்தர ஜீவனாம்சம் எழுபது லட்சம் வேண்டும் என்று கேட்டாள். அவ்வளவு பணம் முடியாது என்று முழுமனதாக இவர் நிராகரிக்க கடைசியாக முப்பது லட்சம் வாங்கிக்கொள்ள ஒத்துக்கொள்கிறாள். அவரும்  பையனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு, எப்போது வேண்டுமோ அவள் வந்து பார்க்கலாம் என்றும் தான் அனுமதிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் மாறாக, தன்னுடைய பிளாட்டிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றார். முடிந்தவரை மறுத்தாலும், இறுதியாக ஒத்துக்கொண்டு செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் தவணை செட்டில்மென்ட் குடுத்து, இருவர் பேரில் இருந்த வீட்டின் ஒரு பாதி தொகையை இவர் பெறுமாறு பெட்டிஷன் போட்டு, எல்லாம் தொகை குடுத்து முடிக்க ஆறு மாத காலம்  ஆனது. டிவோர்ஸ் ஆன அன்று மாலையே வீட்டின் சாவியை கோர்ட்டில் வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு சொல்லப்பட்டு கடைசியாக வழக்கு முடிந்தது.