Skip to main content

"உங்கள் அன்புதான் எங்களை வலிமைப்படுத்துகிறது" - விராட் கோலியின் உருக்கமான பதிவு!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

rcb players

 

பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி, அவ்வணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'உங்கள் அன்புதான் எங்களை வலிமைப்படுத்துகிறது' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய இப்போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு அணி இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.

 

இந்நிலையில், பெங்களூரு அணி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விராட் கோலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு அணியாகச் சிறந்த பயணமாக அமைந்தது. ஏற்ற, இறக்கம் என அனைத்திலும் ஒன்றாக இருந்தோம். ஆம், இந்த வருடம் நாம் எதிர்பார்த்தது போல அமையவில்லை. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புதான் எங்களை வலிமைப்படுத்துகிறது. விரைவில் உங்களைச் சந்திக்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.