Skip to main content

பதக்க வேட்டைக்கு தயாரான துப்பாக்கி சுடுதல் இளம்வீரர்கள்... ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

1928-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 11 ஒலிம்பிக் போட்டிகளில் 11 முறை பதக்கம் வென்றது. இதில் 8 முறை தங்கம் வென்று  இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக வலம்வந்தது. அதற்கு பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்லாதது வேதனையான ஒன்று. சமீப காலங்களாக ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி டீம் கேமில் எதிர்பார்த்த அளவிற்கு பங்களிக்கவில்லை. இந்த நிலையில் ஷூட்டிங்கில் ஜூனியர் மற்றும் சீனியர் வீரர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவது, ஷூட்டிங்கில் ஒலிம்பிக் பதக்கங்களை இந்திய வீரர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. 
 

 

aburvi


2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்யோவில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஒரு சில பதக்கங்களை மட்டுமே பெற்றுவரும் இந்திய அணி இந்தமுறை பதக்க வேட்டையை நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். 2004-லிருந்து 2016 வரை நடந்த 4 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 12 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் ஷூட்டிங் பிரிவில் 1 தங்கம் உட்பட 4 பதக்கங்கள் பெற்றுள்ளது. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா முதல் முறையாக தங்கம் வென்று தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 
இன்டர்நேஷனல் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் ஃபேடரேஷன் உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 20 முதல் 28-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இந்த தொடரின் வெற்றி மூலம் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற முடியும். இதில் ஆண்கள் பிரிவில் இந்திய அணியை சேர்ந்த இளம் வீரரான சௌரப் சவுத்ரி 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் அபுர்வி சண்டேலா 10 மீ ஏர் ரைஃபில் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப் சவுத்ரி மற்றும் மனு பாகர் தங்கம் வென்றுள்ளனர். புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 3 தங்கம் வென்று முதலிடத்தில் உள்ளது.   
 

aburvi

 

இந்திய அணியின் ஜூனியர் ஷூட்டிங் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணா வீரர்கள் தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவினை பின்பற்ற வேண்டும் என்று ஜஸ்பால் தெரிவித்துள்ளார்.  
 

ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற 16 வயதே ஆன சௌரப் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்க பதக்கம் வென்றார். இளம் வயதில் ஆசிய கோப்பை போட்டியில் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐ.எஸ்.எஸ்.எப். உலக சாம்பியன்ஷிப், ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பை, யூத் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய ஏர் துப்பாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் இவர்தான்.
 
  
ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் 10 மீ ஏர் ரைஃபில் பிரிவில் தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா ஜெய்ப்பூரை சேர்ந்தவர். அபுர்வி சண்டேலா 2012-ஆம் ஆண்டு டெல்லியில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 10 மீ ஏர் ரைஃபில் பிரிவில் தங்க பதக்கம் வென்றார். 2014-ஆம் ஆண்டு இன்டர்ஷூட் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்றார். இதில் இரண்டு பதக்கம் தனியாகவும், இரண்டு பதக்கம் அணியாகவும் வென்றார். அதே ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார். 
 

ஐ.எஸ்.எஸ்.எப் உலகக்கோப்பையில் கலப்பு இரட்டையர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற மனு பாகர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். மனு பாகர் மெக்ஸிக்கோவில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலகக்கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவில் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் மனு பாகர் ஆவார். மனு பாகர் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் அணியில் ஓம் பிரகாஷ் மிதார்வால் உடன்  2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலகக் கோப்பை போட்டியில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றார். 
 

இந்திய அணி துப்பாக்கி சுடுதலில் முன்னேற்றம் கண்டு வருவதற்கு  முன்னாள் பயிற்சியாளரான லோசோ சசுசக் ஒரு முக்கிய காரணம். அஞ்சலி பாக்வாட், அபினவ் பிந்த்ரா, தேஜஸ்வினி சாவந்த், ககன் நரங் ஆகியோருக்கு வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளார். 1998 முதல் 2000-ஆம் ஆண்டு வரையும், பின்னர் 2004 முதல் 2009 வரையான காலங்களிலும் சசுசக் இரண்டு முறை வெற்றிகரமாக இந்திய அணிக்கு பயிற்சி அளித்துள்ளார். 
 

anjali

 

ஏர் ரைஃபில் பிரிவில் சிறந்த வீரர்கள் பெரும்பாலும் 50 மீ பிரிவில் கலந்து கொள்வதில்லை. இது மிகவும் மோசமான ஒன்று. இந்திய அணியில் நல்ல திறமை வாய்ந்த ஏர் ரைபில் துப்பாக்கி சுடும் வீரர்கள் இருந்தபோதும் ஒரு சில பிரிவுகளில் சற்று பின்வாங்குகின்றனர். குறிப்பாக பெண்கள் பிரிவில் இது சிறிது பலவீனமாக உள்ளது என்று சசுசக் தனது கருத்தை கூறியுள்ளார்.
 

“காலையில் நன்றாக இருக்கும். ஆனால் துப்பாக்கி சுடுதல் போட்டியின்போது வீரர்கள் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் காற்று வந்துவிடும். கடினமாக இருக்கும்.  எளிதான நிகழ்வு அல்ல. உலகில் ஒரு 10000 நல்ல ஏர் ரைஃபில் வீரர்கள் உள்ளனர். ஆனால் துல்லியமாக ஸ்மால் ஃபோர் சுடுபவர்கள் 100 மட்டுமே " என்று சசுசக் தற்போதைய இளம்வீரர்கள் பற்றி தெரிவித்துள்ளார். 
 

வரும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிட்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஷூட்டிங், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

Next Story

'இதயத்திலிருந்து போராடினேன்' - கண்ணீருடன் ஓய்வை அறிவித்த சாக்‌ஷி மாலிக்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 'Fought from the heart'-Sakshi Malik tearfully announces retirement

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்கு பிறகு பிரிஜ் பூஷண் தலைமை பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மொத்தம் உள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சாக்‌ஷி மாலிக் இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கண் கலங்கிய சாக்‌ஷி மாலிக் தன்னுடைய காலணியை எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஒரு பெண் தலைவர் வேண்டும் என தான் விரும்பியதாகவும் அது நடக்கவில்லை என்பதால் தான் ஓய்வு பெறுவதாகவும், இந்த தேர்தலில் பிரிஜ் பூஷண் தொடர்புடையவர்கள் யாரும் போட்டியிட வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது வருத்தம் அளிப்பதாகவும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Cricket in the Olympics Official notification released

 

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.  இந்த போட்டிக்கான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ்பால் - சாஃப்ட் பால், பிளாக் புட்பால் உள்ளிட்ட 5 போட்டிகளைச் சேர்த்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது. அதே சமயம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய அணி பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டும், ரஷ்ய வீரர்கள் விருப்பப்பட்டால் ரஷ்ய நாட்டின் கொடியில்லாமல் தனிப்பட்ட முறையில் வீரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பேஸ் பால் - சாஃப்ட் பால், லார்க்ரோஸ் உள்ளிட்ட 5 விளையாட்டுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு ஒலிம்பிக் விளையாட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டதற்கான அடையாளமாக விராட் கோலியின் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.