Skip to main content

ஃபாலோ-ஆன் தராத இங்கிலாந்து; இந்தியா அபார தொடக்கம்!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021
india vs england first test

 

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 578 ரன்கள் குவித்தது.

 

அதற்குப்பிறகு ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. புஜாரா (73), பந்த் (91) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ஒரு கட்டத்தில் இந்திய அணி, போட்டியில் மீண்டுவருவதை போல தெரிந்தாலும், அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் மீள வாய்ப்பில்லாமல் போனது. கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாகப் போராட இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுந்தர் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

241 ரன்கள் இந்தியா பின்தங்கி இருந்ததால் இங்கிலாந்து ஃபாலோ-ஆன் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. அதனையடுத்து இன்னிங்சின் முதல் பந்திலயே ரோரி பர்ன்ஸை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் அஸ்வின். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 1 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்து, 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.