Skip to main content

ரோகித்தின் காதலர் தின பரிசு; வலுவான நிலையில் இந்தியா!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

rohit sharma - rithika

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது.

 

சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இது அவரது 7-வது சதமாகும். மேலும், ரஹானே அரை சதமடித்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி சீரான வேகத்தில் ரன்களைக் குவித்தது.

 

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரஹானே 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய அஸ்வின், 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரிஷப் பந்த் 33 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

 

அதேநேரத்தில் ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகாவிற்கு காதலர் தின பரிசளித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் போட்டியைக் காண ரித்திகா மைதானத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.