Skip to main content

மேலும் ஒரு டெல்லி கேபிடல்ஸ் வீரருக்கு கரோனா உறுதி!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

anrich nortje

 

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகள், கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே டெல்லி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல், டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு கரோனா உறுதியானது.

 

கரோனா உறுதிசெய்யப்பட்ட வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் தேவதத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார். இந்தநிலையில், டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

அன்ரிச் நார்ட்ஜே இந்தியாவிற்கு வந்தபோது எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்ததாகவும், இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி ஏழுநாள் தனிமைப்படுத்தபட்ட அவருக்கு, தற்போது கரோனா உறுதியாகியுள்ளதாகவும் டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஐபிஎல்லில் கலந்துகொள்ளும் வீரர்கள், அணியுடன் இணைவதற்கு முன்பு ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமென்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கரோனா தடுப்பு விதிமுறையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய வீரர்கள் ஏற்கனவே கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால், அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்