Skip to main content

4 ஓவரில் 3 விக்கெட்!!! அறிமுக போட்டியிலேயே அசத்திய சென்னை பெண்...

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
hemalatha


 


நேற்று நடந்த டி-20 போட்டியில், இந்தியா- நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இதில் முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா பங்கேற்றார். ஆல்ரவுண்டரான இவர் முதல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் பெற்றுவிட்டார்.
 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது களமிறங்கிய ஹேமலதா 7 பந்துகளில் 2 பவுண்ட்ரிகள் உட்பட 15 ரன்களை குவித்தார். பின் பவுலிங்கின்போது அவர் 4 ஓவரில் வீசி,  3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் அவர் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.