Skip to main content

ஐபிஎல் போட்டியில் மாஸ் காட்டிய அணிகளும் வீரர்களும்...!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

இந்த வருட ஐபிஎல் தொடரில் 18 போட்டிகளில் வெற்றி தோல்விகள் கடைசி ஓவரில் தீர்மானிக்கப்பட்டன. இமாலய சிக்ஸர்கள், அதிரடி சதங்கள், ஹெலிகாப்டர் ஷாட்கள் என அதிரடி பேட்டிங் களைகட்டியது. 

 

csk

 

வழக்கம்போல கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்ததில் தோனி முதல் இடத்தில் உள்ளார். 24 பந்துகளில் 74 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 308.3, 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்து பெங்களூர் வீரர் ஸ்டோனிஸ் 20 பந்துகளில் 66 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 330, 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 66 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 287, 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 
 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி உள்பட 18 போட்டிகள் கடைசி ஓவர் த்ரில்லிங் கொண்டிருந்தது. சூப்பர் ஓவர் மூலம் 2 போட்டிகளில் முடிவு தெரிந்தது. 10 ரன்களுக்கும் குறைவாக 4 போட்டிகளில் அணியின் வெற்றி தோல்விகள் இருந்தன. 
 

மொத்தம் 60 போட்டிகளில் 19416 ரன்கள், 785 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 232/2 ரன்களும், குறைந்தபட்சமாக பெங்களூரு அணி 70/10 ரன்களும் எடுத்தன.  
 

தோனி 12 இன்னிங்ஸ்களில் 416 ரன்கள், 134.63 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சென்னை அணியின் பேட்டிங் யூனிட்டை பலப்படுத்தியுள்ளார். தோனி அதிகபட்ச சராசரியாக 83.20 கொண்டு விளையாடியுள்ளார். 7 முறை 30+ ரன்கள் அடித்து சில போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு தனி ஒருவனாய் போராடினார். 

 

dhoni

 

தோனி 111 மீட்டர் இமாலய சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார். மும்பை அணியின் பொல்லார்ட் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்து ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்துள்ளார். மும்பை வீரர் ஹார்திக் பாண்டியா 17 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார்.   
 

இந்த சீசனில் டெல்லி அணி அதிக பவுண்டரிகள் (236) அடித்துள்ளது. கொல்கத்தா அணி 143 சிக்ஸர்கள் அடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 6 சதங்கள், 106 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 
 

வெளிநாட்டு வீரர்கள் ஒரு அணிக்கு நான்கு பேர் விளையாடும் நிலையில் 13 முறை 4-க்கும் குறைவாக வெளிநாட்டு வீரர்கள் விளையாடியுள்ளனர். அதிகமாக வீரர்களை மாற்றியதில் பஞ்சாப் அணி முதல் இடத்தில் உள்ளது. 32 முறை மாற்றியுள்ளது. 
 

டெத் ஓவர்களில் அதிரடிக்கு பஞ்சமில்லாத நிலையில் கடைசி 3 ஓவர்களில் 13 முறை 50+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களில் கடைசி 3 ஓவர்களில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்தது இந்த ஐபிஎல் தொடரில் தான். 
 

சென்னை அணி கடந்த ஆண்டு ஒவ்வொரு 13 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸ் அடித்தது. ஆனால் இந்த ஆண்டு 22 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் அடித்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 9 பந்துகள் அதிகம் எடுத்துக்கொண்டது.
 

warner

 

ஹைதராபாத் அணியின் வார்னர் கடந்த 5 சீசனில் 500+ ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு கோலி 5 முறை 500+ ரன்கள் எடுத்த சாதனையை சமன் செய்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த கெயில் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார். 126 போட்டிகளில் வார்னர் 4706 ரன்கள் எடுத்துள்ளார்.  
 

இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி எடுத்த ரன்களில் 50% ரன்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் எடுத்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் 100+ ரன்கள் 3 முறை வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் எடுத்துள்ளனர். 
 

கொல்கத்தா அணியின் ரஸுல் ஒவ்வொரு 4.79 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸ் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டாக கொல்கத்தா அணியின் ரஸுல் 204.82 வைத்துள்ளார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டாக சென்னை அணியின் ராயுடு 93.07 கொண்டுள்ளார்.    
 

அதிக டாட் பால் (சதவீதம்) செய்த வீரர்களில் வாட்சன் முதலிடத்தில் உள்ளார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடிய வாட்சன் கிட்டத்தட்ட 47% டாட் பால் செய்துள்ளார். மொத்தமாக 299 பந்துகள் சந்தித்து 398 ரன்கள் எடுத்துள்ளார். சந்தித்த பந்துகளில் 142 பந்துகள் டாட் பால்கள்.  அதிகம் டாட் பால் செய்த வீரர்களில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 153 பந்துகளை டாட் செய்துள்ளார்.  
 

இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் வார்னர் இருந்து வந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ள வார்னர் 12 போட்டிகளில் 692 ரன்கள், 143.87 ஸ்ட்ரைக் ரேட், 69.20 சராசரி. இதில் 8 அரைசதங்கள், ஒரு சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக 2 ரன்கள் எடுத்தது வார்னர் தான். 63 முறை 2 ரன்கள் மற்றும் 195 சிங்க்ல்ஸ் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது நான்கு முறை 3 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றார். 
 

டெல்லி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் தவான் 64 பவுண்டரிகள் அடித்து அதிக பவுண்டரிகள் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் ரஸுல் 52 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

 

 

 

 

Next Story

ஒரு முறை, இரு முறை அல்ல... ஒவ்வொரு முறையும் அசத்திய அணி...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

2011-ஆம் ஆண்டில் 139, 2013-ல் 148, 2017-ல் 129, 2019-ல் 149. இவை ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி டிபண்ட் செய்த ரன்கள். குறைந்த ரன்களை டிபண்ட் செய்வதில் வல்லவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர் மும்பை அணியின் பவுலர்கள்.

 

mi

 

2011 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை என வென்ற 6 இறுதிப்போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்திருந்தது. இதில் 2011-ஆம் ஆண்டு ஹர்பஜன் கேப்டன். மற்ற அனைத்து போட்டிகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார்.
 

தாகூரின் பவுன்சர்கள், தாஹிரின் சுழல், பொல்லார்டின் இறுதிநேர அதிரடி, பொல்லார்டுக்கு வீசிய அகலப்பந்து சர்ச்சை, மீண்டும் சொதப்பிய சென்னை பேட்டிங், தோனியின் சர்ச்சைக்குரிய ரன் அவுட், வாட்சனின் போராட்ட குணம் கொண்ட பேட்டிங், மிடில் ஓவரில் சஹாரின் அசத்தல் பந்துவீச்சு, டெத் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவின் மிரட்டலான பவுலிங், மலிங்காவின் கடைசி ஓவர் த்ரில்லிங் என நேற்றைய போட்டி எதிர்பார்த்தது போலவே பல பரபரப்புகளை கொண்டிருந்தது.
 

2013-ல் பொல்லார்ட் 32 பந்துகளில் 60 ரன்கள், 2017-ல் குருணல் பாண்டியா 38 பந்துகளில் 47 ரன்கள், 2019-ல் தனது பிறந்தநாளில் மீண்டும் பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் என முதல் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு வீரர் அடித்த ரன்களே அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

 

pollard

 

இந்த வருடம் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் முதல் பேட்டிங்கின்போது 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. வார்னர், பேர்ஸ்டோவ் என அச்சுறுத்தும் பேட்டிங் லைன் கொண்ட சன்ரைசர்ஸ் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 

மற்ற அணிகளை ஒப்பிடும்போது மும்பை அணியின் பவுலிங் அட்டாக் மிகவும் பலமாக இருந்து வருகிறது. மேலும், மும்பை அணியின் பயிற்சியாளர்களின் அனுபவமும் இதற்கு ஒரு காரணம். மன ரீதியாக குறைந்த ரன்களை டிபண்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே இரண்டாவது இன்னிங்சை விளையாடுகின்றனர்.
 

அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்பை அணி மிகவும் அசத்தலாக செயல்படுகிறது. சென்ற முறை ரெய்னா, ஜடேஜா போன்ற இடது கை ஆட்டகாரர்களுக்காக அணியில் சேர்க்கப்பட்ட ஜெயந்த் யாதவ் ரெய்னாவை வீழ்த்தினார். இந்த முறை மைதானத்திற்கு ஏற்ப ஒரு கூடுதல் ஃபாஸ்ட் பவுலர் தேவைப்பட்டதால் அவருக்கு பதிலாக இந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த மிட்செல் மெக்லீனகான் அணியில் சேர்க்கப்பட்டார்.

 

மைதானத்தின் தன்மை, எதிரணியின் பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீரர்களை தேர்வு செய்வதில் மற்ற அனைத்து அணிகளைவிட மும்பை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு டீம் மேனேஜ்மண்ட், பயிற்சியாளர்கள் யூனிட், கேப்டன்ஷிப் ஆகியோர் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
 

ஒரு ஆட்டத்தை மாற்றக்கூடியது பீல்டிங். பெரும்பாலும் சிறப்பாக பீல்டிங் செய்பவர்கள் மும்பை அணியினர். ஆனால் நேற்று 3 கேட்ச்கள், இரண்டு ரன் அவுட்கள் மிஸ் செய்தனர். குறைந்த ரன்களை டிபண்ட் செய்கையில், இவ்வளவு மிஸ் சான்ஸ், தேவையில்லாமல் சென்ற 10+ ரன்களையும் தாண்டி மும்பை வென்றது பெரிய சாதனை தான். 
 

இக்கட்டான சூழ்நிலையில் அணியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை ரோஹித் தெளிவாக உணர்ந்திருக்கிறார். எதிரணியின் பேட்ஸ்மேன்களின் பிளஸ், மைனஸ் அறிந்து பவுலர்களை சரியான முறையில் கையாண்டுள்ளார். கள வியூகம் மற்றும் வீரர்களின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எந்த இடத்தில் பயன்படுத்துவது என கேப்டன்சியில் மேலும் மேலும் முதிர்ச்சியடைந்து வருகிறார் ரோஹித் சர்மா.
 

பெரும்பாலும் மற்ற அணியுடன் விளையாடும் போதும் தோனியின் ஸ்மார்ட் ஐடியா சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தரும். மும்பை அணியுடன் மோதும்போது அதே ஸ்மார்ட் ஐடியா மூலம் விளையாடினாலும், மும்பை அணி டபுள் ஸ்மார்ட்டாக சென்னை அணியை வீழ்த்திவிடுகிறது. இந்த சீசனில் சென்னை அணியை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் சுலபமாக வெற்றி பெற்றது மும்பை அணி. இறுதிப்போட்டியில் மட்டுமே கடைசி வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது மும்பை அணி.  
   

இதுவரை  ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளை 6 முறை சந்தித்த ரோஹித் சர்மா ஒரு முறை கூட தோல்வியடையவில்லை. 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சர்மாவின் மும்பை அணி 3 முறை தோனி தலைமையிலான சென்னை அணிக்கு எதிராகவும், ஒரு முறை தோனி விளையாடிய புனே அணியுடனும் வென்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல. ஒவ்வொரு முறையும் தோனி அணியை வீழ்த்துவது சாதாரண செயல் அல்ல. இது சர்மாவின் கேப்டன் ஸ்கில்களை எடுத்துக் காட்டுகிறது.

 

 

 

 

Next Story

பிக் பாஷ், பி.எஸ்.எல். தொடர்களை அடித்து நொறுக்கிய ஐ.பி.எல்.

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

இன்றைய இணைய உலகில் சமூக வலைதளங்கள் இரசிகர்களையும் அவர்களின் பிரபலங்களையும் எளிதாக இணைத்துவருகிறது. குறிப்பாக கிரிக்கெட் லீக் தொடர்களில் சமூக வலைதளத்தின் பயன்பாடும் உபயோகமும் அதிகமாக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாகவே பல கிரிக்கெட் லீக் தொடர்களின் அப்டேட்கள் அவர்களின் இரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. 

 

ipl

 

மேலும் சமூக வலைதளங்கள் மூலம் லீக் தொடரின் பட்டியல், டிக்கெட் விற்பனை தொடக்கம் மற்றும் சில லீக் தொடரின் விளம்பரம் போன்றவற்றுக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் ஒவ்வொரு லீக் தொடருக்கும் தனி தனி சமூக வலைதளங்கள் உள்ளது. இதனை ஏராளமான இரசிகர் பட்டாளம் பின் தொடர்கின்றனர். அதன்படி இரசிகர்கள் அதிகம் பின் தொடரும் டாப் ஐந்து கிரிக்கெட் லீக் தொட்ரகளின் பட்டியல்.
 

இதில் பி.பி.எல். எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடருக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உள்ளது. இதற்கு இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லை. இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 0.89 மில்லியன் பேரும் ட்விட்டரில் 0.059 பேரும் பின் தொடர்கிறார்கள். மொத்தமாக பி.பி.எல். தொடர் 0.954 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்த தொடர் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 

அடுத்தப்படியாக ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரை 3.16 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதில் ஃபேஸ்புக் 2.4 மில்லியன், ட்விட்டர் 0.29 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராம் 0.47 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2011-ம் தொடங்கப்பட்டது. 
 


வெஸ்ட் இண்டிஸ்-ன் கரீபியன் ப்ரீமியர் லீக் எனப்படும் சி.பி.எல். தொடர் 2013-ல் தொடங்கப்பட்டது. ஆசியாவில் மிகவும் பிரபலமான இந்த தொடருக்கு சமூக வலைதளங்களில் மொத்தம் 3.83 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 3.4 மில்லியன், ட்விட்டர் 0.181 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.250 பேர். குறிப்பாக தினமும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கும் தொட்ராக இது உள்ளது. 
 

இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்-ஐ (பி.எஸ்.எல்) 5.54 பேர் பின் தொடர்கிறார்கள். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 3.9 மில்லியன், ட்விட்டர் 1.2 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.44 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். 
 

பி.எஸ்.எல். எப்போதும் அரபு நாடுகளில் நடைபெறும், இருந்தபோதும் இதற்கு பாகிஸ்தான் இரசிகர்களின் பட்டாளம் குறைவதில்லை. இது உள்நாட்டிலேயே நடந்தால் இன்னும் பின் தொடர்புவர்களின் எண்ணிக்கை கூடும் என கருதப்படுகிறது.
 

இவை அனைத்தையும் அடித்து நொறுக்கி முதலிடத்தில் ஐ.பி.எல். உள்ளது. ஐ.பி.எல் தொடருக்கு மொத்தம் 30.6 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் 21 மில்லியன், ட்விட்டர் 6.5 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியன் பேர் உள்ளனர். இதற்கும் பின் தொடர்புவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. ஐ.பி.எல். தொடர் 2008-ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.