Skip to main content

"தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசு பள்ளி"

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

மாவட்டத்தில் முதன்மை மாதிரி பள்ளியாக தேர்வு செய்த அரசு பள்ளியில் தலைமையாசிரியர் தரையில் அமர்ந்து மாணவர்களை வழிநடத்தும் செயல் பெற்றோர்களை பிரம்மிக்க வைக்கின்றது. "கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப்பதிலாக காமராசர் வாழ்த்து பாடலாம்" என்றார் தந்தை பெரியார்.கல்விக்காக பல்வேறு சலுகைகளை அளித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற காரணத்தால் காமராசர் பிறந்தநாளை ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். தேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு மாவட்டத்திலேயே மதன்மை மாதிரி பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி இயங்கி வருகின்றது.அரசு பள்ளியை கண்டு விலகிச் சென்ற பெற்றோர்கள் இப்பள்ளியை கண்டு பெருமிதம் கொள்கின்றனர். தங்களது குழந்தைகளை இப்பள்ளியை தேடிவந்து சேர்க்கும் அளவிற்கு பெருமையை சேர்த்துள்ளது இப்பள்ளி.மாதம் ஒருமுறை பெற்றோர் அழைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி பெற்றோர்களின் நிறை குறையை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

government school

பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தப்பட்டு மிகவும் சரியான பராமரிப்போடும் இயங்கி வருகின்றது. இதனால் பெண்கள் மாதவிடாய் பிரச்னை காலங்களில் சந்திக்கக்கூடிய பரச்னைகளை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.சுமார் 10 ஏக்கர் பரப்பளவை கொண்ட இப்பள்ளியில் நூலகம்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிசிடிவி கேமரா, நவீன கணினி ஆய்வகம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் (நபார்டு வங்கி நிதி உதவி ஆர்ஐடிஎப் திட்ட ஆண்டு 2014-2015) கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இப்பள்ளி. இப்பள்ளி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது அதில் சில : 1.சிறந்த பள்ளிக்கான விருது-2018 2.பசுமை பள்ளிக்கான விருது-2018 3.தூய்மை பள்ளிக்கான சான்று- 2017.

government school

போன்ற பல்வேறு விருதுகளை பெற்று தனியார் பள்ளிகளுக்கு ஒரு சவாலாக விளங்குகிறது.
இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக வந்த மாணவர்களை அப்பள்ளி தலைமையாசிரியர்  திரு.மோகன் அவர்கள் வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து மாணவர்களை வரவேற்றார்.கல்விக்கு  மட்டும் முன்னூரிமை அளிக்காமல் விளையாட்டு , இசை, ஓவியம் , தற்காப்புக் கலைகள் என பண்பாட்டு ரீதியாக அனைத்திலும் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பல விருதுகளை பெற்று பெருமிதம் கொள்கின்றனர் ஆசிரியர்கள்.

government school

கல்வியோடு இயற்கையை மேம்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பேனிப்பாதுகாத்து வருகின்றனர்.அரசியலில் மாணவர்களின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு தலைமையாசிரியர் பதவி பிரம்மாணம் செய்து வைக்கின்றார்.தேர்தவை பற்றி தலைமையாசிரியர் கூறுகையில் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் பாடத்தையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பதவிகளிலுள்ள மாணவர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர்.குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்க்கும் மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பள்ளி வளாகத்தில் சுகாதார ரீதியாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்கின்றனர். இத்தேர்தல் மூலம் மாணவர்கள் வருங்காலங்களில் சிந்தித்து செயல்படுவார்கள் என்பதே இதன் நோக்கம் என்கின்றார்.

தலைமையாசிரியர் திரு.மோகன் அவர்கள் மற்ற அரசு பள்ளிகளுக்கு விடுக்கும் மிகப்பெரிய வேண்டுகோள் மாணவர்களுக்கு பணியாற்றுவதற்காக தான் நாம் ஊதியம் பெறுகின்றோம். முதலில் மாணவர்களிடம் நெருங்கி பழகும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலை முதலில் அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் நாம் செயல்பட்டால் நிச்சயமாக அவர்களிடம் இருந்து ஒரு வெற்றியை நாம் எதிர்பார்க்கலாம் என்பதே என் வேண்டுகோள்.

 


பா.விக்னேஷ் பெருமாள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.