Skip to main content

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர் ஐ. பெரியசாமி! லண்டன் பயணத்தில் திடீர் மாற்றம்! 

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

In response to Chief Minister M.K.Stalin, Minister I. Periyasamy! Sudden change in London trip!

 


தென்மாவட்ட மக்களின் தெய்வமாக வணங்கக் கூடிய பென்னிகுக்கு தமிழக அரசு சார்பில் லண்டனில் சிலை வைக்கப்படுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டிக் கொடுத்தார். ஆனால் இந்த தென் மாவட்ட தமிழக மக்களுக்காக முல்லைப் பெரியாறு அணையை பென்னிகுக் கட்டும்போது இடையில் கட்டுமான பணி பாதிக்கப்பட்டது. அதுனால்  அணை கட்டும் முயற்சியையும் கைவிடுமாறு ஆங்கில அரசு அறிவித்தது. இருந்தாலும் தான் எடுத்த முயற்சியை விடக்கூடாது என்ற முடிவுடன் பென்னிகுக் தனது சொந்த நாடான லண்டனுக்குச் சென்று அங்கு தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கொண்டு வந்து தமிழக மக்களுக்காகவே இந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்தார்.

 

dmk

 

அதனாலேயே தென் மாவட்ட மக்கள் பென்னிகுக்கை கடவுளாக நினைப்பதும் தங்கள் பிள்ளைகளுக்கும், கடை, வியாபார ஸ்தலங்களுக்கும் அவரது பெயரை வைத்து வழிபட்டு வருகிறார்கள். அதோடு பென்னிகுக் பிறந்த நாளான பொங்கல் பண்டிகை அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பென்னிகுக்காகவே பொங்கல் வைத்து வழிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல் தமிழக அரசும் பென்னிகுக் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்திருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் தேக்கடியில் பென்னிகுக் சிலையை தமிழக அரசு வைத்துள்ளது. கூடலூர் லோயர் கேம்பில் பென்னிகுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மணிமண்டபம்  கட்டி 6 அடி உயரத்தில் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். அதுபோல் மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பென்னிகுக் சிலை உள்ளது. உத்தம பாளையத்திலும் சிலை உள்ளது. இப்படி தென் மாவட்ட மக்களுக்காக வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்த பென்னிகுக்கை தென் மாவட்ட மக்களும் அரசும் தொடர்ந்து மரியாதை கொடுத்து வருகிறார்கள்.

 

dmk

 

இந்த நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற சில மாதங்களிலே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பென்னிகுக்கு அவரது சொந்த நாடான லண்டனில் சிலை வைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள தமிழ் சங்கம் மூலம் ஏற்பாடு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் பென்னிகுக் சிலை லண்டனில் வைக்க அனுமதி அளித்தது தொடர்ந்து, அடுத்த மாதம் 10ம் தேதி பென்னிகுக் சிலையைத் தமிழக அரசு சார்பில் திறக்க இருக்கிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும், பென்னிகுக் சிலையைத் திறந்து வைக்க வருகைதரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரை பாராட்டியும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், லண்டனில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் முல்லைப் பெரியாறு அணையில் பென்னிகுக் இருப்பது போலவும் அதோடு முதல்வர் ஸ்டாலின் படத்தையும் சிலையைத் திறந்து வைக்க வருகை தரும் அமைச்சர் ஐ பெரியசாமி படத்தையும் போட்டு அங்குள்ள தமிழ்ச் சங்கம்  விளம்பரப் பலகை வைத்து இருக்கிறது. 

 

இந்நிலையில் வருகிற 10ம் தேதி லண்டனில் பென்னிகுக் சிலையை திறந்து வைப்பதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று திண்டுக்கல்லிலிருந்து சென்னை புறப்பட்டார். திண்டுக்கல், தேனி மாவட்டம் முழுவதும் லண்டன் செல்லும் அமைச்சர் ஐ.பெரியசாமியை பாராட்டி ப்ளக்ஸ் பேனர்களும், வால் போஸ்டர்களும் அங்கங்கே அடித்து ஒட்டியிருந்தனர். 

 

இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் சென்று அங்கு பென்னிகுக் சிலையை திறந்து வைக்க இருக்கும் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில்குமார் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கூடலூர் ராஜா, திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ஜெயன், ரெக்ஸ், 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபாஷ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக திரண்டு அமைச்சரை வாழ்த்தி லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். 

 

அப்போது ஐ.பெரியசாமியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு முல்லைப்பெரியாறு அணையை பென்னிகுக் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அப்படிப்பட்ட பென்னிகுக் சிலையை லண்டனில் திறந்து வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்வர் ஸ்டாலின் தான் பென்னிகுக் சிலையை திறந்து வைக்க லண்டன் செல்வதாக இருந்தது. வேலைப் பளுவின் காரணமாக என்னை அனுப்பி இருக்கிறார். முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.