Skip to main content

காதல் கணவரைப் பிரிந்தார் இத்தாலி பிரதமர் மெலோனி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Italian Prime Minister Meloni separated from her  husband

 

இத்தாலிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டபோது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி பெற்று மரியோ டிரோகி நாட்டின் பிரதமரானார். ஆனால் அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கூட்டணிக் கட்சிகள் மரியோ டிரோகிக்கு வழங்கி வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி(45) வெற்றி பெற்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலி வரலாற்றில் மெலோனி முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 

 

இந்த நிலையில், தனது காதல் கணவரான ஆண்டிரியா கியாம்புருனோவை மெலோனி பிரிவதாக அறிவித்துள்ளார். பத்திரிகையாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ தொலைக்காட்சியில் டெய்லி டைரி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் பிரதமர் மெலோனியாவும், ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவும் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த ஜோடிக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 

 

இதனிடையே சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய ஆண்டிரியா ஜியாம்ப்ருனோ, சக பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வார்த்தைகளை உபயோகித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று பிரதமர் மெலோனி தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது காதல் கணவரைப் பிரிவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் மகள் தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவித்தால், அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.