Skip to main content

மனித முகம், மாட்டின் உடல்... இணையத்தை கலக்கும் வைரல் கன்றுக்குட்டி...

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

மாறிவரும் உலக சூழலில் மனிதன் மட்டுமின்றி விலங்குகளும் பல்வேறு புதிய மற்றும் அறிய மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அந்த வகையில் டி.என்.ஏ குறைபாடு காரணமாக மனித முகத்துடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் அர்ஜென்டினா நாட்டில் நடந்துள்ளது.

 

human faced calf in argentina

 

 

அர்ஜென்டினா நாட்டின் வில்லா அனா என்ற பகுதியில் விவசாயி ஒருவர் வளர்ந்துவந்த மாடு சமீபத்தில் கன்று ஒன்றை ஈன்றது. இந்த கன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே உலகம் முழுவதும் வைரலானது. இதற்கான முக்கிய காரணம் அதன் முக அமைப்பே. மாட்டின் உடல் அமைப்பை கொண்ட அந்த கன்றுக்கு முகம் மட்டும் மனித முகம் போல அமைந்துள்ளது. இதனை பார்த்த பலரும் அதிசயித்து அதனுடன் புகைப்படம் எடுத்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஆராய்ச்சியாளர்கள், பல தலைமுறைகளாக அந்த மாட்டின் டி.என்.ஏ வில் ஏற்பட்ட மாற்றங்களால் இப்படி நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளனர். மாறுபட்ட மண்டை ஓடு அமைப்பு தான் அதன் இந்த முக அமைப்புக்கு காரணம் எனவும், உணவு, சுற்றுசூழல் உள்ளிட்ட பல புறக்காரணிகளால் பாதிக்கப்பட்ட டி.என்.ஏ காரணமாக இவ்வாறு நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

GOAT மெஸ்ஸி - புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

jh

 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று அசத்திய நிலையில், நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

 

அர்ஜெண்டினா, பிரான்ஸ் அணிகள் மூன்றுக்கு மூன்று (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா  வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியது. 

 

இந்நிலையில் அர்ஜெண்டினா அணியை வெற்றியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்ற அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும், GOAT மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்கள். கோல் கீப்பர் மார்டினெஸ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.