Skip to main content

கராச்சியில் அவசர அவசரமாகத் தரையிறங்கிய விமானம்; மீண்டும் டெல்லி திரும்பியதன் பரபரப்பு பின்னணி

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

A flight from Delhi made an emergency landing in karachi

 

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ தனியார் நிறுவன விமானம் ஒன்று கத்தார் நாட்டின் தோஹாவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது நைஜீரியாவைச் சேர்ந்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்த விமானி, கராச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டுள்ளார்.

 

இதனையடுத்து கராச்சியில் விமானத்தைத் தரையிறக்க அனுமதி கிடைத்ததையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பயணியைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் 5 மணிநேரம் கராச்சி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் நடைமுறைகள் அனைத்தும் முடிந்தபின் மீண்டும் டெல்லிக்கு வந்தடைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்