Skip to main content

புதிய வகை கரோனா: இங்கிலாந்தில் முழு  ஊரடங்கு!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

borris johnson

 

இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  கரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் ஏற்கனவே தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.   

 

இந்நிலையில் புதிய வகை கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முழுவதும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் "இங்கிலாந்தின் பல பகுதிகள் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இருந்தாலும், கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், இந்த புதிய வகை கரோனாவைக் கட்டுப்படுத்த நாம் ஒற்றுமையாக, இன்னும்  அதிகம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது" என  தெரிவித்துள்ளார். 

 

இங்கிலாந்தில் தற்போது 27,000 பேர் கரோனா தொற்றோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் மாதத்தில், கரோனா முதல் அலையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை விட 40 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, பிப்ரவரி மாதத்தின் இடைப்பகுதி வரை தொடரலாம் என கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர்ந்து மக்களின் பசியை போக்கி வரும் ஃபெயிரா அமைப்பினர்.!! (படங்கள்)

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

இன்று (08-06-2021) சென்னையில் 23வது நாளாக கடற்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு ஃபெயிரா அமைப்பினர் மதிய உணவை வழங்கினர். இந்தக் கொடிய கரோனா காலத்தில், சென்னையில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் பல தொண்டு நிறுவனங்களும் உதவி செய்துவருகின்றனர்.

 

அந்த வகையில் ஃபெயிரா அமைப்பினர் கடற்கரை பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளிய மக்கள் என 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்.

 

 

Next Story

குக்கரில் சாராயம் காய்ச்சிய நபர்..! காவல்துறையில் சிக்கினார்..!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

The person who distilled alcohol in the cooker ..! Caught in the police

 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா இரண்டாம் அலை உச்சத்தை தொட்டுவருகிறது. முதலில் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்தது. அது சற்று கட்டுக்குள் வர கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தைத் தொட்டுவருகிறது. மே 7ஆம் தேதி அமைந்த புதிய தமிழ்நாடு அரசு மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பிற்கு கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்துவருவதால், மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்து முழு ஊரடங்கிலும், டாஸ்மாக் திறக்காததால், மது அருந்துவோர், அதிக விலை கொடுத்து கள்ளச்சந்தையில் மது வாங்கிவருகின்றனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதும், அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவுசெய்வதும் தொடர்ந்து நடந்துவருகிறது. 

 

இது ஒருபக்கம் இருக்க, பல இடங்களில் தற்போது சாராயம் காய்ச்சிவருகின்றனர். இதனைக் கண்டறிந்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில், நேற்று (06.06.2021) உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் ஏழுமலை என்பவர், தனது வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற காவல்துறையினர், அவரது வீட்டை சோதனை செய்தபோது, அவர் வீட்டில் சாராயம் காய்ச்சியது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.