Skip to main content

சிறுவனைக் கடத்திய இளைஞர்! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The youth who kidnapped the boy! Shocking information at trial!

 

விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகே உள்ள மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (20). இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவருகிறார். இவர், நேற்று முன்தினம் (04.12.2021) அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது ஐந்து வயது மகனை தின்பண்டம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருக்கனூர் டவுனுக்குத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு 7 மணியளவில் உதயன் மட்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது பாட்டியிடம், ‘மண்ணாடிப்பட்டு - திருக்கனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் தானும் அன்பழகன் மகன் ஐந்து வயது சிறுவனும் வந்துகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து என்னைத் தாக்கிவிட்டு சிறுவனை கடத்திச் சென்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாக கூறிவிட்டு சென்றார்கள்’ எனக் கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறுவனின் தந்தை அன்பழகனிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக திருக்கனூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் திருக்கனூர் பகுதியைச் சுற்றிலும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீசாருடன் மாணவர் உதயன் கூடவே சென்று தன்னைத் தாக்கிவிட்டு சிறுவனைக் கடத்திச் சென்ற இடம் இது என்று அடையாளம் காட்டியதோடு, அவர்களுடன் சேர்ந்து உதயனும் சிறுவனைத் தேடியுள்ளார். 

 

இதற்கிடையே, போலீசார் உதயன் பயன்படுத்திவந்த செல்ஃபோனை பறிமுதல் செய்து அந்த ஃபோனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வுசெய்தனர். அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து போலீசார் பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் தனது பெயர் பழனியம்மாள் என்றும், தனது வீட்டில் ஒரு சிறுவனைப் கொண்டுவந்து விட்டுவிட்டு பிறகு வந்து அழைத்துச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற உதயன் இன்னும் வந்து சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என்பதற்காக ஃபோன் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். 

 

அவரிடம் விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட போலீசார், நேரடியாக அந்த வீட்டுக்குச் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும், உதயன் சிறுவனைக் கடத்திவிட்டு, மர்ம நபர்கள் என்று நாடகமாடியுள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

 

இதுகுறித்து உதயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய செல்ஃபோன் வாங்கப் விரும்பியதாகவும், அதற்குப் பணம் கிடைக்காததால் சிறுவனைக் கொண்டுபோய் ஒரு வீட்டில் விட்டுவிட்டு, பணம் கேட்டு கடத்தல் நாடகம் நடத்தி அதன் மூலம் வரும் பணத்தில் செல்ஃபோன் வாங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்தில் சிறுவனைக் கடத்தியதாக கல்லூரி மாணவர் உதயன் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.