Skip to main content

பள்ளி சிறுமியிடம் இளைஞர் ஆபாசப் பேச்சு; 3 கி.மீ. தூரம் பைக்கில் துரத்திய அப்பா - மகள்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Youth arrested Police for misbehaving with school girl ranipet

 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவன் மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறானாம். இவன் பள்ளமுள்ளவாடி கிராமத்திலுள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். பள்ளமுள்ளவாடி கிராமத்தை சேர்ந்த நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஏரிக்கரை மீது சைக்கிள் ஓட்டிக்கொண்டு பேனா வாங்க கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை நிறுத்தி நண்பரின் பெயரை சொல்லி அட்ரஸ் விசாரித்துள்ளான். அந்த சிறுமி சைக்கிளை விட்டு இறங்கி அட்ரஸ் சொல்லும்போது, அந்த சிறுமியிடம் அழகா இருக்க எனத் தொடங்கி ஆபாசமாக பேசியதோடு, உடலின் மீது கை வைத்ததாக கூறப்படுகிறது. அவன் செயலைப் பார்த்து அதிர்ச்சியான அந்த சிறுமி, கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அவன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளான்.

 

அந்த சிறுமி வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நடந்ததை சொல்லியுள்ளார். அதிர்ச்சியான அவர் உடனே காவல்நிலையத்தில் புகார் தரலாம் எனச்சொல்லி மகளை அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். அப்பா – மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும்போது, தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியவன் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்ததைப் பார்த்து சிறுமி தனது தந்தையிடம் சொல்லியுள்ளார். உடனே வண்டியை திருப்பிக்கொண்டு அவனை துரத்தியுள்ளார்கள். வண்டியில் தனது அப்பாவோடு அந்த சிறுமி தன்னை துரத்துவதைப் பார்த்தவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளான். இவர்களும் விடாமல் துரத்தியுள்ளார்கள். இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தியும் அவனை பிடிக்க முடியாததால் தப்பிவிட்டான்.

 

அப்பாவும் மகளும் வந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணையும், அதன் வீடியோவையும் தந்துள்ளனர். இருசக்கர வாகன பதிவு பண்ணின் முகவரியை கண்டறிந்த போலிஸார், அவன் வீட்டுக்கு சென்று அந்த இளைஞனை கைது செய்து அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் கற்றுத் தருவது போல், ஆபாசமாக பேசினால் உடனே கூச்சல் போடவேண்டும், குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும் என சிறுமிக்கு பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தாய்-தந்தை கற்றுத் தந்ததை மனதில் வைத்திருந்து அதுபோல் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவன் மீது புகார் தந்து சிறைக்கு அனுப்பிய அந்த சிறுமி மற்றும் குடும்பத்தாரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர்; காத்திருந்து அவமானப்படுத்திய கிராம மக்கள்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 The family was dragged in a procession wearing sandal garlands and Youth arrested in POCSO case

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 18 வயதுக்குட்பட்ட ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அணில் மூக்னாவர் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பைலேஒங்கலா புறநகர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். அதன் பின்னர், அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்த்னார். 4 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு, வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, வாலிபர் கிராமத்திற்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் வாலிபரின் கையை துணியால் கட்டி செருப்பால் அடித்தும், அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்திற்குள் ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். அவர்களோடு, அந்த கிராம மக்களும் உடன் வருகின்றனர். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.