Skip to main content

சொத்துக்காக சொந்த அண்ணனையே கடத்திய தங்கை!

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

 younger sister kidnapped her own brother for property

 

சொத்துக்காக சொந்த அண்ணனையே கடத்திய தங்கையின் செயல் திருப்பூர் மக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதிக்கு அருகே உள்ள தெக்கலூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்கிற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பொன்னுசாமிக்கு பல்லடம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. சிவக்குமார் தன் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, பொன்னுசாமியின் மகள் அம்பிகா, வேலுச்சாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அறிவொளி நகரில் வசித்து வந்துள்ளார்.

 

அம்பிகாவின் மகன் கோகுல் என்பவர் பாஜக கட்சியில்  விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னுசாமி இறந்துவிட்ட நிலையில், அம்பிகாவுக்கும் அவரது அண்ணன் சிவக்குமாருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தன்னுடைய தந்தை பொன்னுசாமியின் சொத்துக்கள் அனைத்தும் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டது.

 

இதை பொறுக்க முடியாத அம்பிகா குடும்பத்தினர், பெற்றோர்களின் சொத்துக்களை தங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி சிவக்குமாரிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் கடந்த 25 ஆம் தேதியன்று, சிவக்குமார் சேடபாளையத்தில் உள்ள தனது நண்பர் வடிவேல் என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிவக்குமாரை பின்தொடர்ந்து வந்த அம்பிகா மற்றும் அவரது கணவர் வேலுச்சாமி மற்றும் சிலர், சிவக்குமாரை மாருதி காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர். பல்லடத்தில் அம்பிகாவுக்குச் சொந்தமான வீட்டில், சிவக்குமாரை அடைத்து வைத்து காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு கையாலும், கட்டையாலும் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் வலி தாங்க முடியாத சிவகுமார், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்.. என்ன விட்ருங்க என கெஞ்சி கதறியுள்ளார். அதைத் தொடர்ந்து, 21 ஸ்டாம்ப் பேப்பரில் சிவக்குமாரிடம் சொத்து பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர்.

 

அதுபோதாதென்று, அவரிடம் இருந்த நகை பணங்களை பிடுங்கிக்கொண்டு பெங்களூரில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின்னர், மயக்கம் தெளிந்த சிவக்குமார் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறி அவர்களின் உதவியுடன் மீண்டும் பல்லடத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களின் உதவியுடன், தன்னை கடத்திய அம்பிகா குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் கோகுல், வேலுச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தலைமறைவாக உள்ள சிவக்குமாரின் தங்கை அம்பிகாவை, போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சொத்திற்காக தனது சொந்த அண்ணனையே கடத்தி சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரை திருப்பிப் போட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.