Skip to main content

ஜெயிச்சது நீங்கதான்... ஆனா செல்லாது... கரூர் கலாட்டா!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

நீங்க தான் ஜெயிச்சிங்க , நாங்க தான் வெற்றி சான்றிதழ் கொடுத்தோம். ஆனா இப்ப செல்லாது என தேர்தல் அதிகாரி சொன்னதால் பதவியிழந்துள்ளார் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஒருவர். 

இந்த விசித்திர வில்லங்கமான சம்பவம் கரூர் கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் ஊராட்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணராயபுரம் பேங்கில் சாலை மதுக்கரையில் வசித்து வருகிறார்.

 

 You won ... but not valid ... Karur Kalata!

 

இந்தப் பகுதியில் பொதுமக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், சமூக ஆர்வலராக இருந்து வருவதால் நடைபெறும் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் பங்குபெற்று பேச வேண்டும் என்பதற்காக திருச்சியில் இருந்த ஓட்டை இந்தப் பகுதிக்கு மாற்றி கொண்டார்.

கிராம பஞ்சாயத்தில் மக்கள் திட்டங்களுக்காக செலவிடப்படும் செலவுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று பஞ்சாயத்து ஊழலுக்கு எதிராக போராடி வந்தார்.

ஒரு கட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட நாமே தேர்தலில் நின்றால் என்ன முடிவு செய்துதான் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சித்தலவாய் ஆறாவது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு மொத்தம் 270 ஓட்டுகளில் 240 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்ற பிறகு துணைத் தேர்தலில் மொத்தம் இருந்த ஒன்பது உறுப்பினர்களில் ஆறு பேர் வாக்களித்து துணைத் தலைவராகவும் தேர்வு தேர்வு செய்யப்பட்டார் . இந்தநிலையில்தான் இந்த தேர்தல் செல்லாது என அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்திருப்பது கிருஷ்ணமூர்த்திக்கு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் பொது பிரச்சனைக்காக தொடர்ந்து போராடியதன் விளைவே இந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். தேர்தலுக்கு எனக்கு 450 ரூபாய் தான் செலவானது.

ஓட்டு எண்ணும் போது தோளில் நான் போட்டிருந்த துண்டை கழற்றி விட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொன்னார்கள். அதற்காகவே ஓட்டு எண்ணிக்கைக்கு கூட போகவில்லை.

இட ஒதுக்கீடு வந்தவுடன் அரசாணையின்படி எனது ஆறாவது வார்டில் பொது பெண்களிடம் வேட்புமனு வாங்காமல் ஆண்களிடம் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டனர். வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் போது,  இறுதி பட்டியல் தயாரிக்கும்போது,  சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும்போது, தேர்தலின்போது, தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்பு கூட இந்த வார்டு பெண்களுக்கான வார்டு என அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி?

என்னை உறுப்பினர் மற்றும் துணை தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முன்பாக எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம் .

மாவட்ட தேர்தல் அதிகாரி எந்த விளக்கமும் கேட்காமல் நேரடியாக நானே குற்றவாளி என்பது போல் என்னை நீக்கியுள்ளார். அதிகாரிகளின் அலட்சியமும் அவர்களின் தவறை மறைப்பதற்காக செய்யும் நடவடிக்கை இது.

இந்தப் பிரச்சனையில் ஒதுக்கீட்டை சரியாகப் பார்க்காமல் எங்களுக்கு தெரிவிக்காமல் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்தான் குற்றவாளிகள். அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து நீதிமன்றம் வரை சென்று நியாயத்தை நிலைநாட்டுவேன் என்றார்.

கரூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அடாவடியாக நேர்மையற்ற முறையில் பல இடங்களில் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். தற்பொழுது அது உண்மைதானோ என்பதைப் போல உள்ளது இந்த தேர்தல் நடவடிக்கை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.