Skip to main content

தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்த கோவை மாநகராட்சி!! முற்றுகையினரை கைதுசெய்த காவல்துறை!!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

கோவை மாநகராட்சிக்கு 26ஆண்டுகளுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரியும் தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு (சூயஸ்) தாரை வார்த்த கோவை மாநகராட்சியை கண்டித்து அலுவலக முற்றுகை சமூகநீதிக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் வெள்ளமடை நாகராசன் தலைமையில் நடைபெற்றது. 

 

govai

 

 

 

இதில் மாநில நிர்வாகிகள் சிரவை கணேசன் சத்தி இராசேந்திரன், சத்தி சேகர், அலெக்ஸ், தண்டபாணி மாநகர  பொருப்பாளர் இரவிச்சந்திரன் விக்னேஷ் புறநகர் பொருப்பாளர் ஆறுச்சாமி தடா.நாகராசன் மற்றும் ஈரோடு மாவட்ட பொருப்பாளர் கோபால், அய்யப்பன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டு  முற்றுகையிட முயன்றபோது தோழர்களை காவல்துறையினர் கைது செய்து ரயில் நிலையத்திலுள்ள அண்ணாமலை  மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்

சார்ந்த செய்திகள்