Skip to main content

பெண் தொடர்பும், சொத்து அபகரிப்பும்... - தே.மு.தி.க. பிரமுகர் படுகொலை!

Published on 06/09/2020 | Edited on 06/09/2020

 

virudhunagar district dmdk leader incident police investigation

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த சங்கிலிராஜன், முன்னாள் தேமுதிக நகர துணைச்செயலாளர் ஆவார்.  நேற்றிரவு (05/09/2020), திருத்தங்கல்- அதிவீரன்பட்டி சாலையில் உள்ள  ஒரு பாலத்தின் அருகே, உருண்டம்பாறை முட்புதரில், மர்ம நபர்கள் சிலர், இவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

 

சம்பவ இடத்தில் பிணமாகக் கிடந்த சங்கிலிராஜனின் உடலை மீட்ட திருத்தங்கல் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இது அரசியல் சம்பந்தப்பட்ட கொலை அல்ல.. முழுமுழுக்க சொந்த விவகாரம் என்கிறார்கள், காவல்துறை வட்டாரத்தில்.

 

கொலைக்கான பின்னணி இதுதான்-

 

இறந்துபோன ஆசிரியை செல்லத்தாய் திருமணம் ஆகாதவர். இவர் பெயரில் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. செல்லத்தாய்க்கு தங்கை வழி பேத்தி ராமதிலகம். வேறு சாதிக்காரரான சங்கிலிராஜன், ராமதிலகத்தோடு தொடர்பில் இருந்தார். அந்த நெருக்கத்தின் காரணமாக, செல்லத்தாயின் சொத்துகள் அனைத்தையும் ராமதிலகத்தின் பெயருக்கு மாற்றி பதிவு செய்ய தீவிரம் காட்டினார். இந்த நிலையில்தான், சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

கள்ளத்தொடர்புகூட, சங்கிலிராஜன் விஷயத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. அரசியல் செல்வாக்கை முன்னிறுத்தி, தன்னோடு பழக்கத்தில் இருந்த ராமதிலகத்துக்காக  சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியதுதான், கொலை செய்யும் அளவுக்கு பெரிய விவகாரமாகி உள்ளது. செல்லத்தாயின் சொத்தில் தங்களுக்கும் உரிமை இருக்கிறது எனக் கருதிய பங்காளிகள் தூண்டுதலின் பேரிலேயே, சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

 

சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்ட காட்டுப்பகுதி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.