Skip to main content

மதுபோதையில் லாரி கடத்தல்; அதிரடியாக செயல்பட்ட போலீசார்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

viluppuram district parcel lorry incident 

 

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பார்சல்களை ஏற்றி செல்லும் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகன் சரவணன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு உடல் அசதி காரணமாக ஓட்டுநர் சரவணன் லாரியின் அருகில் உறங்கி எழுந்தவர், லாரியின் சாவியை லாரியிலேயே வைத்துவிட்டு டிபன் சாப்பிடச் சென்றுள்ளார்.

 

அப்போது திடீரென ஒருவர் பார்சல் லாரியை கடத்திக்கொண்டு சென்றுள்ளார். டிபன் சாப்பிட்டு விட்டு வந்து லாரியை காணாமல் அதிர்ச்சி அடைந்த சரவணன், தனது பார்சல் லாரி குறித்து எதிரே வந்த வாகன ஓட்டிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பார்சல் லாரி விழுப்புரம் பக்கம் செல்வதாக கூறியுள்ளனர். உடனே அச்சரப்பாக்கம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாக ஓங்கூர் சுங்கச்சாவடிக்கு தகவல் அளித்துள்ளனர். அப்போது அங்கு வந்த பார்சல் லாரியை மடக்கி பிடிக்க  முயன்ற போது சுங்கச்சாவடியின்  தடுப்பு கேட்டை உடைத்துக் கொண்டு மிக அதிவேகமாக பார்சல் லாரி சென்றது. இது குறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

போலீசார் பார்சல் லாரியை துரத்தி சென்று திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது லாரியை கடத்தி வந்த நபர் தப்பிக்க முயற்சி செய்தபோது அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அந்த நபரை திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் விசாரணை செய்ததில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வடக்குபள்ளிகுளம் பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவரது மகன் சோமசுந்தரம் (வயது 36) என்பதும், மதுபோதையில் வாகனத்தை கடத்திச் சென்றதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து சம்பந்தப்பட்ட அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட பார்சல் லாரி ஓட்டுநர் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.