Skip to main content

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து !

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவி ஏப்ரல் 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6- ஆம் தேதி வரை 16 நாள் நடக்கவிருந்த நிலையில் திருவிழா ரத்தாகியுள்ளது. திருவிழா ரத்து பற்றி 6 கிராமத்து பஞ்சாயத்தார்கள் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பியிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.அதில் கரோனாவால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

villupuram district kuvagam festival cancel



ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடக்கும் விழாவில் பல மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்