Skip to main content

அரசு அனுமதி பெறாத பார் மற்றும் டாஸ்மாக் கடை... டாஸ்மாக் சூப்பர்வைஸர் மீது நடவடிக்கை...

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

வேலூர் மாவட்டம், சோளிங்கர் பேரூராட்சியில் சில இடங்களில் அரசு அனுமதியில்லாமல் பார் நடத்துவதோடு, அங்கு கள்ள மார்க்கெட்டில் மதுபானம் விற்பனையும் நடைபெறுவதாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்க்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றது. அந்த புகார்களின் அடிப்படையில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

 

vellore illicit liquor dealers arrested

 

 

சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருக்கடையில் பாரில் குடிமகன்கள் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். அதோடு, அங்கு கள்ள மார்க்கெட்டில் மதுபானமும் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த ஆய்வின் போது அவைகளை காவல்துறை மூலம் பறிமுதல் செய்யவைத்தார் சார் ஆட்சியர். அதேபோல் மேற்கு போர்டின் தெருவிலும் அனுமதியற்று மதுபானம் விற்பனை செய்து வந்த ஒருவர் பிடிபட்டார். 

இவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சோளிங்கர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் எரும்பி என்ற ஊரைச் சேர்ந்த  சவுரி, விஜயகுமார் ஆகிய இரண்டு நபர்கள்  மீதும் குற்றவியல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா  ஆதிவராகபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் அனுமதியில்லாத இந்த மதுபான கடைகளுக்கு மொத்தமாக மதுபானங்கள் சப்ளை செய்த பாண்டிய நல்லூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை மேற்பார்வையாளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் வருவாய்த்துறையினர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேனில் திடீர் தீ விபத்து; ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசம்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Sudden fire accident in van in vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மாவட்டம் பனப்பாக்கத்தில் இருந்து அருள் என்பவருக்குச் சொந்தமான லோடு வேனில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக குடியாத்தம் பகுதிக்கு வந்தது. 

அப்போது, குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் இருந்த வைக்கோல் மின் கம்பிகள் உரசி தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீ மளமளவெனப் பரவிய நிலையில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் இருந்து உடனடியாக வேனை வேகமாக கொண்டு சென்று நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே வேனை ஓட்டுநர் நிறுத்தினார். 

இதனையடுத்து, இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வேனில் ஏற்றி வந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது. மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

 செல்போன் பழுது பார்க்கும் கடையில் திடீர் தீ விபத்து!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
sudden fire in a cell phone repair shop

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மேஸ்திரி வீதியில் எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த அங்காளன் என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை  நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையில் பணியை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கடையிலிருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் தீ மளமளவெனப் பரவி கடையில் இருந்த செல்போன், லேப்டாப், மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் எனச் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆனது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.