Skip to main content

வஸ்த்ரா நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

nn

 

சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கொச்சின் மற்றும் பெங்களூரில் நிகழ்ந்த சோதனை அடிப்படையில் சென்னை கே.கே. நகரில் உள்ள ஒன்பதாவது செக்டாரில் உள்ள வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நீலகண்டன் வீட்டில் இந்த சோதனை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

 

அதேபோல் சென்னை கோபாலபுரத்தில் ரத்தினம் தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வினோத்குமாரின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல் தி.நகர் பார்த்தசாரதிபுரம் ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள அலுவலகம் ஒன்றில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அலுவலகம் வஸ்த்ரா டெக்ஸ்டைல் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தொடர்புடைய இடம் என்று கூறப்படுகிறது. இதேபோல் சென்னை பட்டாளம், வேப்பேரி, மண்ணடி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்