Skip to main content

பொள்ளாச்சி விவகாரத்தில் மேலும் ஒருவன்: அவன் யார்..?  

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் திருநாவுக்கரசு வாக்குமூலத்தில் இன்னொருவனின் பெயரை சொல்லுகிறான். அவன் அநேகமாக எந்நேரமும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் சொல்லுகின்றன.
 

thiru-riswandh-vasanth-sathish-pollachi


அவன் யார்…? அவன்தான் கெரோன். பெண்களை பெல்ட்டால் அடித்து பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோதான் அவன். கேரளாவைச் சேர்ந்தவன். கேரளாவில் இருந்து அடிமட்ட வாழ்நிலையில் இருக்கும் இளம் பெண்களை வேலைக்கு என கூட்டிக் கொண்டு வந்து அவர்களை தவறாக பயன்படுத்தியவன் என்று கூறுகிறார்கள். 
 

நான்கு பேரோடு இந்த வழக்கை முடிக்க நினைத்தது போலீஸ். அனைத்து தரப்பு மக்களும் ''உண்மை குற்றவாளிகள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை கைது செய்யுங்கள்'' என போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில்தான் பெயருக்கு கெரோனை கொண்டு வரவிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை 19.03.2019 செவ்வாய்க்கிழமை கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களே நடத்தியுள்ளனர். 
 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோ, கெரோனை மட்டுமல்ல, 4.10.2016 அன்று ஆதியூர் மேம்பாலத்தில் நடந்த கார் விபத்தில் சுரேகா என்ற மாணவி மட்டும் உயிரிழந்துள்ளார். அந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனுக்கு பெரிய அளவில் காயமில்லை. இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என்கின்றனர். சுரேகாவின் உறவினர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்