Skip to main content

ஒரு லட்ச ரூபாய் பரிசுக்கான கவிதை! -வைரமுத்து தேர்ந்தெடுத்தார்

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
v

 

நக்கீரனுடன் புனே  ஸ்ரீ பாலாஜி சொசைட்டி இணைந்து ’இனிய உதயம்’ இதழில் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில்... கடந்த ஓராண்டில் பங்கேற்று சிறப்புப் பரிசு பெற்ற கவிஞர்களில் இருந்து... ஒரு லட்ச ரூபாய்ப் பரிசுடன் ’கவி இளவரசு’ பட்டத்தைப் பெறப்போகும் கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.


அவர் அந்த அதிர்ஷ்டசாலிக்   கவிஞரை, அவருடைய கவிதை மூலம் தேர்ந்தெடுத்து, ஆசிரியர் நக்கீரன் கோபாலிடம் அதற்கான கடிதத்தை 21.12.2018 மாலை 6 மணியளவில் ஒப்படைத்தார். அப்போது இனிய உதயம் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடனும் அருகில் இருந்தார்.

 

கவிப்பேரரசு வைரமுத்துவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த  ’கவி இளவரசு’ யார்?

இதற்கான விடை...
2019 ஜனவரி இனிய உதயம் இதழில்...

 

சார்ந்த செய்திகள்