Skip to main content

டி.டி.வி. ஒழிக! ஒ.பி.எஸ். ஒழிக! இரு அணிகளுக்கு இடையே பரபரப்பு

Published on 07/03/2018 | Edited on 07/03/2018


 

opsttv


தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிகழ்சிகளுக்காக ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் மதுரையில் இருந்து தேனி செல்ல இருந்தார். அப்பொழுது உடன் இருந்த டிடிவி ஆதரவாளர்களோ, திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாள் வத்தலக்குண்டில் காலமாகி விட்டார் என்ற தகவலை டிடிவியிடம் சொல்லி இருக்கிறார்கள்.
 

உடனே டிடிவியோ ஐபியின் தாயார் மறைவுக்கு போய்விட்டு தேனி போகலாம் என்று கூறிவிட்டு உடனே வத்தலக்குண்டு வந்தார். அதற்குள் ஐபியின் தாயார் உடல்  அடக்கம் செய்யப்பட்டது. அப்படி இருந்தும்கூட ஐபியின் வீட்டுக்கு சென்று தாயாரின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு சிறிது நேரம் ஐ.பி.யிடம் உட்கார்ந்து பேசி விட்டு, பெரியகுளம் வழியாக தேனிக்கு புறப்பட்டார். ஐ.பி. எதிர்கட்சிகாரராக இருந்தாலும்கூட துக்கம் விசாரிக்க டிடிவி சென்றதை கண்டு மாற்று கட்சிகார்களை அசந்து போய் விட்டனர்.
 


இந்த நிலையில் தான் ஏற்கனவே பெரியகுளத்தில் டிடிவி ஆதரவாளர்கள் டிடிவி வருகையை ஒட்டி அங்கங்கே பிளக்ஸ் பேனர்களை வைத்து இருந்தனர். இது ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. திடீரென அரசியலில் குதித்த ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத் வருகிற 11ம் தேதி ஜெயின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இளைகஞர் இளம் பெண் பாசரை சார்பில் 7070 பயணாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்க  இருக்கிறார் அதற்காக அங்கங்கே பிளக்ஸ் பேனர்களை ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்து வருகிறார்கள். அதுபோல் பெரியகுளத்திலும் வைத்து வந்தனர்.
 

அப்பொழுது மூன்றாம் தென்றல் அருகே ஏற்கனவே டிடிவி ஆதரவாளர்கள் பேனர் வைத்து இருந்தனர். அந்த  இடத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பேனர் வைக்க முடிவு செய்து அதை கழட்ட பார்த்தனர். இந்த விஷயம் டிடிவி ஆதரவாளர்களுக்கு தெரியவே அந்த பேனரை கழட்டகூடாது என 50க்கும் மேற்படடோர் அங்கு திரண்டு வந்து ஒபிஎஸ் ஆதரவாளர்களோடு பிரச்சனை செய்தனர். 
 

இதனால் டென்ஷன் அடைந்த ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த பேனரை உடனே கழட்ட வேண்டும் என கூறி பஸ் மறியலில் குதித்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதன் பின் காக்கிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியும் கூட சமாதானம் ஆகவில்லை. இதனால் டென்ஷன் அடைந்த போலீசார் இரு தரப்பினரும் வைத்த பேனர்களை கழட்ட உத்திரவிட்டதின் பேரில் பேனர்களையும் கழட்டினார்கள். அதற்குள் தேனி செல்ல டிடிவி இந்த பக்கம் வந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு எட்டவே இரு தரப்பினரையும் ஒழுங்கு படுத்தி வந்தனர். டிடிவி கார் வந்து விடவே அங்கு இருந்த ஒபிஎஸ் ஆதரவாளர்களோ டிடிவி ஒழிக... என கோஷம் போட்டனர். இதனால் டென்ஷன் அடைந்த டிடிவி ஆதரவாளர்களும் ஒபிஎஸ் ஒழிக... ஒபிஎஸ் ஒழிக... என குரல் கொடுத்தனர். இதனால் இரு தரப்பினரும் கோஷம் மிட்டவாரே மோதிக்கொள்ளும் சூழ்நிலை தெரியவே, உடனே அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதற்குள் டிடிவியும் தேனி சென்று தனியார் விடுதியில் தங்கி விட்டார். 
 

இருந்தாலும் மாவட்டத்தில் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட பிளக்ஸ் பேனர் பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்காக டிடிவி செல்ல இருப்பதால் பதட்டமான சூழல் உருவாகி வருகிறது.

   
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.