Skip to main content

விலகியவர்கள் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள்தான்.. சசிகலா சந்திப்புக்கு பிறகு டிடிவி பேட்டி!

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகதத்தில் இருந்து தேர்தலுக்கு முன்னரே செந்தில்பாலாஜி தேர்தல் தோல்விக்கு பிறகு தங்கத்தமிழ்செல்வன், இசக்கி சுப்பையா என முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெவ்வேறு கட்சிகளுக்கு பிரிந்துசென்ற நிலையில், தற்போது கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து ஆலோனை நடத்தினார். 

ttv dinakaran interview!


இந்த சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகளின் பட்டியலை சசிகலாவிடம் காட்டி அதுகுறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிற நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

அமமுகவில் இருந்து விலக முடிவெடுத்த பின்புதான் என்னை குறை சொல்கிறார்கள். அப்படி அதிமுகவில் சேர வேண்டும் என முடிவெடுத்த பிறகுதான் என்மீது குறைசொல்லிவிட்டு விலகி சென்றுள்ளார் இசக்கி சுப்பையா. சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள்தான் என கூறினார்.

சார்ந்த செய்திகள்