Skip to main content

கவரிங் நகைகளை வைத்து ரூ. 1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி...!

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

கிராம மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காவும் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் வங்கியின் அதிகாரியே மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trichy Bank fraud issue

 



திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தச்சன்குறிச்சி, புதூர் உத்தமனூர், ரெட்டிமாங்குடி ஆகிய கிராமங்களுக்கு சேவை வங்கியாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தச்சன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஸ்கண்ணன் (32) என்பவர் கூட்டுறவு வங்கி அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் ராஜேஸ்கண்ணனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அதே கூட்டுறவு வங்கியில் ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த மூத்த அலுவலர் பாலகிருஷ்ணன் (58) பொறுப்பு அலுவலராக நியமிக்கபட்டுள்ளார். இந்நிலையில் பயிர்கடன், நகைகடன் மற்றும் இ-சேவை மையங்களின் பொறுப்புகளை பாலகிருஷ்ணன் கண்காணிப்பில் கூட்டுறவு வங்கி செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 6ம் தேதி குல்முகமது என்ற அலுவலரை லால்குடி வட்டார கூட்டுறவு துணை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டார். 

 

Trichy Bank fraud issue

 



இந்நிலையில் தச்சன்குறிச்சியை சேர்ந்த முத்துராணி, "தான் 7 பவுன் நகையை விவசாய கடனில் அடமானம் வைத்துள்ளேன். ஆனால் தனக்கு கடன் கொடுத்த ரசீதில் நகைக்கு உள்ள தொகையை விட கூடுதல் தொகைக்கு அடமானம் எழுதப்பட்டுள்ளது. தலைவர், துணைதலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் தலையீடு இல்லாமல் இவ்வளவு தொகை முறைகேடு நடந்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார். மேலும் முறையாக வங்கியின் கணக்குகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

மேலும் பாக்கியராஜ், ஜெயா, சிவக்குமார், உள்ளிட்ட 36க்கும் மேற்பட்ட பெயர்களில் போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு நகைகளை அடமானத்தில் எடுக்காமலேயே கவரிங் நகைகளை வைத்து ரூ.60 லட்சத்து 60 ஆயிரத்து 300 கொள்ளையடிக்கப்பட்டதை புதிதாக நியமனம் செய்த குல்முகமது கண்டுபிடித்தார்.

இது மொத்தம் 1 கோடிக்கு மேல் இந்த மோசடி கொள்ளை நடந்திருக்கிறது என்கிறார்கள். இதுகுறித்து கூட்டுறவு வங்கியின் தலைமை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே விசாரணை நடத்தியதில் ராஜேஸ்கண்ணன் மற்றும் வங்கியில் வேலை செய்து வரும் பணியாளர்கள் போலியாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் அடமானம் வைத்த நகை வங்கியில் உள்ளதா என தெரிந்து கொள்வதற்காக வங்கியை முற்றுகையிட்டனர். மேலும் வங்கியில் ரெட்டிமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ், பெருமாள், ராமர் உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்டோர் பயிர்கடன் பெற விண்ணப்பித்ததில் அவர்களுக்கு உரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பயிர்கடன் வழங்காத நிலையில் பயிர்கடன் கேட்டு வங்கியை முற்றுகையிட்டனர்.

மேலும் அதிகாரிகள் சோதனை மற்றும் பொதுமக்களின் முற்றுகையை அடுத்து வங்கிக்கு வந்த சிறுகனூர் காவல்நிலைய போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் அதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வங்கியில் போலி ஆவணங்ககள் தயார் செய்து பல லட்சம் மதிப்பீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட ரஜேஸ்கண்ணன் தலைமறைவானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.