Skip to main content

கோவிலில் பெண் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; வைரலாகும் வீடியோ

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

Tragedy of female devotees in Tanjore temple

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் பிரசித்தி பெற்ற மலையாள மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தை முன்னிட்டு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை பக்தர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருவார்கள். அதே போல் இந்த ஆண்டு கடந்த 4 ஆம் தேதியன்று மலையாள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது.

 

அதனைத் தொடர்ந்து, இந்த கோவிலில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, மலையாள மாரியம்மனை பல்லாக்கு தூக்கிச் செல்வது என ஏகப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த திருவிழாவில் கடைசி நாளான 11 ஆம் தேதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த கோயிலின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் அம்மனுக்கு தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி வந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

அப்போது, தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கிக் கொண்டிருக்கும்போது இரண்டு பெண்கள் வேக வேகமாக உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் தீக்குண்டத்தில் தங்களது நேர்த்திக் கடன்களை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் தீயில் விழுந்து அலறித் துடித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அந்தப் பெண்களை உடனடியாக தீயில் இருந்து காப்பற்றியுள்ளனர். இதனால் அந்த கோயிலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.