Skip to main content

தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்...

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Today's Corona situation in Tamil Nadu

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,694 லிருந்து குறைந்து 1,657 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று குறைவு. கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வந்த ஒருநாள் தொற்று இன்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,51,880 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 190  என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதேபோல் நேற்று கோவையில் 196  ஆக இருந்த பாதிப்பு இன்று  189 ஆகக் குறைந்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,509 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,261 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,662  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,06,153 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-189, ஈரோடு-117, செங்கல்பட்டு-113, திருவள்ளூர்-72, தஞ்சை-96, சேலம்-64, திருச்சி-60, திருவாரூர்-62, திருப்பூர்-84 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்