Skip to main content

தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Today's corona situation in Tamil Nadu!

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,592 லிருந்து குறைந்து 1,556 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,55,609 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 169 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 165 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,036 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,256 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,564 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,72,942 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை-206, ஈரோடு-96, செங்கல்பட்டு-110, திருவள்ளூர்-73, தஞ்சை-104, நாமக்கல்-60, சேலம்-59, திருச்சி-58, திருப்பூர்-82 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, தஞ்சை மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு மேல் தொடர்ந்து தொற்று பதிவாகி வருகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்